Monday 4 August 2008

‘சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல’ என்ற ஊடகவியலாளர் நோர்வேயில் புலி ஆதரவாளரால் தாக்கப்பட்டார் : த ஜெயபாலன்

நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பகுதி உறுப்பினரால் தாக்கப்பட்டு உள்ளார். இவர் அங்கு விளையாட்டுத்துறை மற்றும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவருகிறது. யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது. குட்டி என்று அறியப்பட்ட பத்மநாதன் என்பவரே மக்கள் மத்தியில் வைத்து இக்கொடூரமான செயலைச் செய்துள்ளார். இச்சம்பவத்தில் பத்மநாதன் கிளாஸால் தாக்கியதில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. உடனடியாக சரவணன் ஒஸ்லோ மருத்துவமனையின் உடனடிச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல’ என்ற ஊடகவியலாளர் நோர்வேயில் புலி ஆதரவாளரால் தாக்கப்பட்டார் : த ஜெயபாலன்

No comments: