Monday 17 November 2008

கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தல் : தேசம்நெற்

கடந்த செப்ரம்பர் 11ம் திகதி 72 பேர் கையெழுத்திட்டு ‘அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!’ என்ற அறிக்கை ஒன்று 17 இணையத்தளங்களுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களின் பின் மேலும் இரண்டு கையெழுத்தாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வறிக்கை தேசம்நெற்றுக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதாலும் இவ்வறிக்கையுடன் தேசம்நெற் ஆசிரியர்கள் உடன்படாததாலும் நாம் இதற்கு பதில் சொல்வது தவிர்க்க முடியாததாகிறது. இலங்கை மற்றும் உலக அரசியல் நிலவரங்களின் திடீர் மாற்றங்கள் சார்ந்த பிரசுரங்கள் மற்றும் களப்பணிகளில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட்டுவருவதால் இந்த பதில் அறிக்கை சற்று தாமதமாக வருகிறது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்து சுதந்திரத்தை வலுப்படுத்தல் : தேசம்நெற்

Tuesday 28 October 2008

நான் சரவணன் அல்ல வித்யா பற்றிய ஒரு உரையாடல் : தர்மினி (பிரான்ஸ்)

பலருக்கும் திரு நங்கைகள் பற்றிய பிரமைகள் தமிழ் திரைப்படங்களில் அவர்களைப் பற்றிக் கட்டமைப்பதில் தோன்றுகிறது. ஒரு காட்சியிலோ பாடலின் இடையிலோ தோன்றுதல் என்பதாக அமைகிறது. அவற்றின் தொனி எதுவென்பதும் அக்காட்சிகளில் தெளிவாகத் தென்படும். பொதுவெளிச்சமூகம் திரு நங்கைகள் பற்றிய எதுவிதமான புரிதல்களும் அற்றதாகவே உள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளை உணர்வுகளை உடலின் மாற்றங்களை விளங்கிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நான் சரவணன் அல்ல வித்யா பற்றிய ஒரு உரையாடல் : தர்மினி (பிரான்ஸ்

Wednesday 1 October 2008

பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் அமைதிப் போராட்டம் ஒன்றை பிரித்தானிய தமிழ் போறத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஒக்ரோபர் 6ää திக்கட் கிழமை மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை இவ்வமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோடைகால விடுமுறையின் பின் ஒக்ரோபர் 6ல் பாராளுமன்றம் கூட இருப்பதால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளிப்பார்கள் என தமிழ் போறத்தினர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளனர். வன்னிப் பகுதியின் மீது இலங்கை அரசபடைகள் நடாத்தும் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக்களை உடனடியாக நிறுத்தும் படி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை இவர்கள் கோர உள்ளனர். மேலும் இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னிப் பகுதியிலேயே இடம்பெயர்ந்து உள்ள 230,000 மக்களுக்கும் பிரித்தானிய அரசு உடனடியா நேரடியாக உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவ்வமைதிப் போராட்டத்தில் கோர உள்ளனர். தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு தமிழரதும் கடமை எனவும் பிரித்தானிய தமிழ் போறத்தினர் தெரிவித்து உள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன்

வன்னியில் தரையிலும் கடலிலும் கடும் சமர். 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்வு. : தொகுப்பு ஏகாந்தி

வன்னிப் பிரதேசம் மீது நடத்தப்பட்டு வரும் தரைவழி வான்வழித் தாக்குதல்களால் சுமார் 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்ந்து அல்லற்பட்டு வருகின்றனர். எனினும் பௌத்தம் பேசும் ஜனாதிபதியும் அவரது ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் அந்த மக்கள் நிலை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுகின்றவர்கள் இல்லை என்று. புதிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னியில் தரையிலும் கடலிலும் கடும் சமர். 250,000 வரையிலான மக்கள் இடம்பெயர்வு. : தொகுப்பு ஏகாந்தி

Tuesday 30 September 2008

திருக்கோணேஸ்வரர் ஆலயக் குருக்களின் படுகொலையும் பௌத்த பேரினவாதமும் : ஜெ ஜென்னி

யாழ்ப்பாண பிரதேசங்களிலிருந்து 90களுக்கு பின் ஏற்பட்ட போர்ச் சூழல்களால் இடம் பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை என தமிழர் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இந்த சூழலில் அல்வாய் மேற்கு என்ற பிரதேசத்திலிருந்து உயிர்தப்பி பிழைப்பு தேடி வந்த ஒரு இளம் குருக்கள் தான் இந்த சிவ சிறி சிவ கடாட்ச சிவகுகராஜா குருக்கள். 30.05.69ல் பிறந்த இவர் 4 பிள்ளைகளின் தந்தையுமாவார். ஒரு சமயக் குருக்களாக இருந்தாலும், சாதி மதங்களுக்கு அப்பாலும் மககளை நேசித்த மனிதனாக வாழ்ந்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திருக்கோணேஸ்வரர் ஆலயக் குருக்களின் படுகொலையும் பௌத்த பேரினவாதமும் : ஜெ ஜென்னி

Monday 29 September 2008

தோழரும் - அம்மானும் சந்திப்பு! பழைய உறவு மலர்கிறது? : த ஜெயபாலன்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனும் நேற்று செப் 28ல் சந்தித்து உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கருணா அணி - பிள்ளையான் அணி என்ற முரண்பாடு தீர்க்கப்படாத சூழலில் ஈபிடிபி க்கும் ரிஎம்விபி யின் கருணா அணிக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்று உள்ளது. இது புதிய அணி ஒன்று உருவாவதை நோக்கியதா என்ற கேள்வி தமிழ் அரசியல் வட்டாரங்களில் எழுந்து உள்ளது. பிரித்தானியாவில் இருந்து கருணா திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தோழரும் - அம்மானும் சந்திப்பு! பழைய உறவு மலர்கிறது? : த ஜெயபாலன்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (29) முடிவு - கோத்தபாய ராஜபக்ஷ

வன்னியில் தன்னார்வ தொண்டுகளில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த பிரதேசத்தைவிட்டு வெளியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனிவரும் வரும் காலங்களில் தொடர்ச்சியாக வன்னியில் தங்கியிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (29) முடிவு - கோத்தபாய ராஜபக்ஷ

Sunday 28 September 2008

கருத்துச் சுதந்திரம்: தினக்குரல் பத்திரிகையில் கையெழுத்தாளர்களின் பெயர்கள் சுயதணிக்கை : வி அருட்செல்வன்

‘கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுப்போம்’ என்ற தலைப்பில் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில் தேசம்நெற் இணையத்தின் கருத்துச் சுதந்திர தளத்திற்கு எதிராக கையழுத்து இட்டவர்களின் பெயர்களை தினக்குரல் பத்திரிகை சுயதணிக்கை செய்து உள்ளது. இவர்களின் பெயர்களை வெளியிடுவது தங்களது ஊடகவியலாளர்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் என்பதால் அச்செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்த அப்பத்திரிகை கையெழுத்திட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் தவிர்த்து உள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்துச் சுதந்திரம்: தினக்குரல் பத்திரிகையில் கையெழுத்தாளர்களின் பெயர்கள் சுயதணிக்கை : வி அருட்செல்வன்

இலங்கையின் மோசமான சூழலைத் தடுக்க தலையிடுங்கள் - தவிகூ பகிரங்க அழைப்பு

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை கைப்பற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தற்சமயம் வடக்கில் கடும் யுத்தம் செய்து வருகிறது. ஆதன் பகுதியாக அண்மையில் வன்னி பிரதேசத்தில் அரசு யுத்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த யுத்த நடவடிக்கைகளினால் வன்னி பிரதேசத்துக்குள் பாரிய மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த இடம்பெயர்ந்த மக்கள் மோசமான மனிதஅழிவு நிலையை எதிர்கொண்டுள்ளார்கள். இப்பகுதிக்கு உணவு மருத்துவபொருட்கள் எடுத்துசெல்ல ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடையானது இம் மக்களின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையின் மோசமான சூழலைத் தடுக்க தலையிடுங்கள் - தவிகூ பகிரங்க அழைப்பு

Saturday 27 September 2008

அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் - ஒரு பார்வை : த ஜெயபாலன்

இன்று (28 செப்) அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்ட தமிழ் அகதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று லண்டனுக்கு வெளியெ ஹெஸ்ரிங் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாஸ் என்ற அரச உதவியுடன் வாழும் 30க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் ஹெஸ்ரிங் பகுதியில் வாழ்கின்றனர். லண்டனில் வாழும் 100,000க்கும் அதிகமான தமிழர்களுடன் அல்லாமல் லண்டனில் இருந்து பல மைல்கள் ஒதுக்குப்புறமாக கடற்கரையை ஒட்டிய பிரதேசமொன்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அரச உதவிபெறுபவர்களை லண்டனுக்கு வெளியே நாட்டிக் பின் தங்கிய பகுதிகளில் அரசு குடியமர்த்தி வருவது கடந்த பல ஆண்டுகளாக ஒரு செயன்முறையாக இருந்து வருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட மக்கள் - ஒரு பார்வை : த ஜெயபாலன்

வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அரசு கூறுவது சுத்தப் பொய். - மாவை சேனாதிராஜா

“வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அரசு கூறுவது சுத்தப் பொய். அதில் துளியும் உண்மை இல்லை. அங்குள்ள மக்கள் இப்போதும் பட்டினியால் வாடுகின்றனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். வன்னிக்குப் போதிய உணவு அனுப்புவதை உறுதிப்படுத்தவும், துரிதப்படுத்தவும் நாடாளுமன்றம் முழு அளவில் தலையிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அரசு கூறுவது சுத்தப் பொய். - மாவை சேனாதிராஜா

படை நடவடிக்கைகள் காரணமாக 53561 குடும்பங்களைச் சேர்ந்த 219058 அங்கத்தவர்கள் முல்லை மாவட்டத்தில்..

இராணு வத்தினரின் படை நடவடிக்கைகள் காரணமாக இரண்டு லடசத்திற்கும் மேற்பட்ட மக்கள் முல்லை மாவட்டத்திற்குள் வந்து தங்கியுள்ளதாக முல்லைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. பார்திபன் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் திகதி வரை 53561 குடும்பங்களைச் சேர்ந்த 219058 அங்கத்தவர்கள் முல்லை மாவட்டத்திற்குள் வந்து தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிலர் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், ஒரு தொகுதியினர் பாடசாலைகள் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர் எனவும், உலக உணவுத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு உணவப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் பாதிக்கபபட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படை நடவடிக்கைகள் காரணமாக 53561 குடும்பங்களைச் சேர்ந்த 219058 அங்கத்தவர்கள் முல்லை மாவட்டத்தில்..

Friday 26 September 2008

சிதைந்து செல்லும் புலம்பெயர் ஜனநாயகம். : பாண்டியன் தம்பிராஜா

கிட்டத்தட்ட புலிக்கும் புளொட்டிற்கும், புலிக்கும் ரெலோவிற்கும் போன்ற எதிரி உணர்வுகள் வந்து விட்டதா? 20-25 வருடங்கள் நெருங்கி பழகிய எமக்குள் அடங்கியிருந்த இயக்க வாத மிருகம் தலைதூக்கி விட்டது போலுள்ளது. நாம் தேசம் - ராகவன் குறூப் என கண்ணை கட்டுகிறோம்? ஒரு காலத்தில் கால் முறிந்த நேரத்தில் ஓடோடி வந்து பார்த்து ஆறுதல் சொன்னவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு அலைந்து காவலுக்கு நின்றவர்கள் இன்று காலை முறிப்போம் என கங்கணம் கட்டி நிற்பது ஏன்? நண்பர்களே சிந்திப்போம்.!

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சிதைந்து செல்லும் புலம்பெயர் ஜனநாயகம். : பாண்டியன் தம்பிராஜா

ரெலோ தலைவர் செல்வம் முன்னாள் போராளியுடன் இரு மணிநேரங்கள் : ரி சோதிலிங்கம்

கட்டுரையிலுள்ள பல கேள்விகளின் நியாயத்தன்மையை தான் விளங்கிக் கொள்வதாகக் கூறிய செல்வம் கடந்த காலத்தில் ரெலோவில் இணைந்து வேலை செய்த தோழர்களையும் ஒன்று சேர்த்து கூட்டம் ஒன்றை நடாத்தி, கடந்தகால சரி, பிழைகள் பற்றி விமர்சிக்கவே தான் விரும்புவதாகவும், ஆனால் இது உடனடியாக சாத்தியமில்லை என்றும் கூறினார்.

தாம் தற்போது நடைபெறும் யுத்தம் சம்பந்தமாகவே முக்கிய கவனம் செலுத்துவதாகவும், அதில் இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கெதிரான - யுத்ததிற்கெதிரான பிரச்சாரங்களில், முக்கிய கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ரெலோ தலைவர் செல்வம் முன்னாள் போராளியுடன் இரு மணிநேரங்கள் : ரி சோதிலிங்கம்

Wednesday 24 September 2008

பள்ளமடு மக்களை விடுவியுங்கள். அவர்களை சுதந்திரமாக பயணிக்க அனுமதியுங்கள்!!! : ஜெ.ஜென்னி

மன்னார் முருங்கன் பகுதியில் பள்ளமடு என்னும் கிராமத்தில் கடந்த நாலரை மாதங்களாக ராணுவ பாதுகாப்பு வலையமாக்கப்பட்ட பிரதேசத்தில் இன்று எம் மக்கள் படும் அவலங்களை யார் அறிவார். புலிப் பாசிசத்தின் பிடியிலிருந்து இலுப்பக்கடவை, முழங்காவில், நாச்சிக்குடா, மல்லாவி, துணுக்காய், பல்லவராயன்கட்டு, கரிகாலநானப்படுவான், கிராஞ்சி, வேரவில், வலப்பாடு, புநகரி என்ற கிராமங்களில் இருந்து அல்லல்பட்டு, அவதியுற்று மரண பீதிகளுடன் நாடோடிகளாக இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசும் - அதன் யந்திரமான ராணுவமும் உள்நோக்கத்துடன் வரவேற்றது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பள்ளமடு மக்களை விடுவியுங்கள். அவர்களை சுதந்திரமாக பயணிக்க அனுமதியுங்கள்!!! : ஜெ.ஜென்னி

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்; என இலங்கை ஊடகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் சீற்றம்

இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து கவலையடைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகள், ஐரோப்பிய அயலுறவு கொள்கை போன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா, இலங்கை ஊடகங்களில் ஐரோப்பிய ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்திருப்பதையிட்டு கவலையடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ள அவர் அதில் தெரிவித்திருப்பதாவது;

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் - என இலங்கை ஊடகங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் சீற்றம்

வன்னியில் யுத்தம் உக்கிரம். நியுயோர்க்கில் ஜனாதிபதி, சொல்ஹெய்ம் சந்திப்பு - ஏகாந்தி

வடபகுதியில் யுத்த நிலை கடந்த இரு வாரங்களாக மிகவும் உக்கிரமமான நிலையில் இருப்பதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் (22) வடபகுதியில் ஐந்து இடங்களில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல நேற்று (23) மோதல்கள் தொடர்ந்துள்ளன.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னியில் யுத்தம் உக்கிரம். நியுயோர்க்கில் ஜனாதிபதி, சொல்ஹெய்ம் சந்திப்பு - ஏகாந்தி

Monday 22 September 2008

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு உணவு விநியோகம்: விசேட கலந்துரையாடல் இன்று.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான உணவு விநியோகம் தொடர்பாக ஆராயவென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உலக உணவுத் திட்ட உயரதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வழமைபோன்று எதுவிதமான குறைபாடுகளுமின்றி தொடராக நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஐ. நா. வின் பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் பயணமாவதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு இந்தப்பணிப்புரையை வழங்கினார். இப்பணிப்புரைக்கு அமையவே அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன உலக உணவுத் திட்ட கொழும்பு அலுவலக சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு உணவு விநியோகம்: விசேட கலந்துரையாடல் இன்று.

போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

யாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

Sunday 21 September 2008

உள்ளாடை அரசியல் : ஜெ ஜென்னி

20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்கா - ஐரோப்பா உட்பட்ட மேலை நாடுகளில் பல சமூக பொருளாதார கலாச்சார புரட்சிகளும், பல அரசியல் மாற்றங்களும் நடந்தேறின. இதில் பெண்களும் வெகுஜனசக்திகளாக சரிக்குச் சரி பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதில் பெண்கள் தங்கள் தஙகள் வாழ்நிலைக்கு ஏற்றவாறு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாம் சார்ந்த வர்க்கப் பிரிவினரின் குணாம்சங்களோடு சமூக மாற்றத்தையும் பெண்கள் உரிமையையும் முன்நிலைப்படுத்தினர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
உள்ளாடை அரசியல் : ஜெ ஜென்னி

தேசம்நெற் இணையத்திற்கு ஆப்பு! புலம்பெயர் ஜனநாயகவாதிகள் தேசம்நெற்றுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!! : நவமணி

அண்மையில் தேசம்நெற் தொடர்பாக வெளிவந்த அறிக்கை பற்றி இலங்கையில் வெளியாகும் நவமணி பத்திரிகையில் இன்று (செப் 21) வெளியான செய்தி. தற்போது தேசம்நெற்றில் இடம்பெறும் கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாக இச்செய்தி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தேசம்நெற் இணையத்திற்கு ஆப்பு! புலம்பெயர் ஜனநாயகவாதிகள் தேசம்நெற்றுக்கு எதிராக கையெழுத்து வேட்டை!! : நவமணி

Friday 19 September 2008

யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு : விம்பம்

28 ஞாயிறு செப்டம்பர் 2008, மாலை 2.30 — 07.00
Quakers Meeting House, Bush House, Wanstead, London, E11 3AU

தலைமையுரை - திரு. மு.புஷ்பராஜன்
வரவேற்புரை - திரு. யோ.நவஜோதி
இந்தியப் பிரிவினை சினிமா - திரு. ச.வேலு
வன்முறை திரைப்படம் பாலுறவு - திரு.கே.கிருஷ்ணராஜா
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - திரு. ந.சபேசன்
மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை - திரு. ப. சந்துஷ்
நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை - திரு. மு.நித்தியானந்தன்
அரசியல் இஸ்லாம் - திரு. எஸ்.எம்.எம். பஸீர்

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு : விம்பம்

Monday 15 September 2008

இணக்கத்தின் அடிப்படையில் பொறியியலாளர்களையும் இணக்கப்பாடு முடியும் வரையில் சேவைக்காக அனுப்பி வைக்கும் நடைமுறை உண்டு.

வவுனியா படைத்தலைமையகத் தாக்குதலில் காயமடைந்த இந்தியாவின் இரண்டு பொறியியலாளர்களையும் திருப்பியழைப்பதென்பது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான விடயமெனவும், இரண்டு அரசாங்கங்களும் இணங்கிக் கொண்டமைக்கு அமையவே இந்த இரண்டு பொறியியலாளர்களும் திருப்பியழைக்கப்பட்டதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இணக்கத்தின் அடிப்படையில் பொறியியலாளர்களையும் இணக்கப்பாடு முடியும் வரையில் சேவைக்காக அனுப்பி வைக்கும் நடைமுறை உண்டு.

Sunday 14 September 2008

வரையறுக்கப்பட்ட பகுதி நேர ஜனநாயகவாதிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

இந்தக் கட்டுரை எங்களுடைய புலம்பெயர் ஜனநாயக, கலை, இலக்கிய, தத்துவார்த்த……. மேதைகளின் அறிக்கை வருவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. அதனால் இவர்களுடைய இந்த அறிக்கை பற்றி எதுவும் இதில் இல்லை. இது அந்த மேதைகளுக்கான பதிலுமல்ல. இதை இப்ப போட்டால் அதுக்கு பதிலாப்போகும் என்று இப்ப பிரசுரிக்க முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றவை மற்ற ஆசிரியப் பெருமக்கள். நான் விடுவனே. கட்டுரை போடாட்டி அங்கால போய் சைன் பண்ணிப் போடுவன் என்று வெருட்டித்தான் கட்டுரையை போடுவிக்கிறன். நான் ஆசிரயர் என்றதால எனக்கும் சில றைற்ஸ் இருக்கெல்லோ. இப்ப இதைப் போடாட்டி பிறகு போட்டு பிரியோசனம் இல்லை. அதனால் தான். சரி சரி அதெல்லாம் இருக்கட்டும். விசயத்துக்கு வருவம் என்னுடைய லெவலுக்கு அந்த அறிக்கை கொஞ்சம் ரூமச். மற்றைய ஆசிரியர்களுடன் சேர்ந்து குத்துப்பட்டு ஆறுதலாக ஒரு விளக்கம் வரும். இப்ப நான் எழுதி இருக்கிறது என்னுடைய சின்ன மூளைக்கு எட்டிய சின்ன விசயங்கள். இது ஒரு வெள்ளோட்டம் அவ்வளவு தான். – ரி கொன்சன்ரைன்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வரையறுக்கப்பட்ட பகுதி நேர ஜனநாயகவாதிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!

கடந்த வருடம் ஒக்ரோபர் ஆரம்பிக்கப்பட்ட தேசம்நெற் இணையத்தளம் புலம்பெயர் தமிழ் சூழலில் காணப்பட்ட துருவ அரசியலை தகர்த்து உருவாக்கிய ஊடகமுறையின் பலனாக பல்வேறு வகையான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் ஊடகம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில ஊடகங்கள், சில அமைப்புகள், பலர் தனிநபர்களாக 72 பேர் கையொப்பமிட்டு இவ்வறிக்கை வெளிவந்து உள்ளது. இவ்வறிக்கை எந்த அமைப்பினால் அல்லது ஊடகத்தினால் அல்லது தனிநபரினால் தயாரிக்கப்பட்டது என்பது பற்றி உத்தியோகபூர்வமாக எதுவும் குறிப்பிடாத போதும், இவ்விவாதத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வறிக்கையை தேசம்நெற் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தற்சமயம் மனித உரிமைகள், வன்னி மக்கள் எதிர்கொள்ளும் அவலம் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல்களை ஒழுங்கமைப்பதில் தேசம்நெற் ஈடுபட்டு இருப்பதால் உடனடியாக இவ்வறிக்கை தொடர்பான எமது கருத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம். ஆனால் இயலுமான வரையில், விரைவில் தேசம்நெற் இவ்வறிக்கை தொடர்பான கருத்தை முன்வைக்கும். நன்றி. - தேசம்நெற்

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல!!!

Friday 12 September 2008

வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறின. அகதிகள் நிலைமை மோசமடையும் அபாயம்! : ஏகாந்தி

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடந்த திங்கட்கிழமை அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு அவசர உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அரசின் இந்த உத்தரவைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விடுத்திருந்தார். இதையடுத்து, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளியேறின. அகதிகள் நிலைமை மோசமடையும் அபாயம்! : ஏகாந்தி

தமிழர்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு தனிநாடே. - செல்வம் அடைக்கலநாதன்

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு சிறி லங்கா இரண்டாவதைத்தவிர வேறு தீர்வுகள் இருக்கமுடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக சிங்கள ஆட்சியாளர்களால் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாமல் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்துள்ளனர். இந்த நிலையில் இனியும் சிங்கள அரசு தமிழர்களுக்கு நியாயமானதொரு தீர்வினை வழங்கும் என எதிர்பார்க்க முடியாது என்றும் தமிழர்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு என்றால் அது தனிநாடாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழர்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு தனிநாடே. - செல்வம் அடைக்கலநாதன்

Thursday 11 September 2008

வன்னி யுத்தம் யாருக்கும் இறுதியானது அல்ல. மனித அவலத்தை நிறுத்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். : த ஜெயபாலன்

Both sides to this long conflict have again shown that they will jeopardize the lives of thousands of ordinary people in the pursuit of military objectives,” Yolanda Foster, Amnesty’s Sri Lanka researcher.

”இந்த நீண்ட யுத்தத்தில் இரு தரப்பினரும், தங்களது இராணுவ இலக்குகளுக்காக ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வை சீரழிப்போம் என்பதை மீண்டும் காட்டி உள்ளனர்.”, யோலன்ட் போஸ்ரர், சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னி யுத்தம் யாருக்கும் இறுதியானது அல்ல. மனித அவலத்தை நிறுத்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். : த ஜெயபாலன்

மேயர் பொன் சிவபாலன் நினைவு நிகழ்வு : எஸ் அரவிந்தன் & வி அருட்சல்வன்

லண்டனில் செப்ரம்பர் 14ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள, பொன் சிவபாலன் அவர்களின் 10வது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி அவர்கள் நினைவு பேருரையாற்றவுள்ளார். 1998 செப்ரம்பர் 11ல் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் மேயர் பொன் சிவபாலன் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். யாழ் நகர மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. பொன் சிவபாலனுடன் மிக நெருக்கமானவரும் அவரது அரசியல் பாதையில் அவருடன் பயணித்தவருமான தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் பொன் சிவபாலனின் நினைவு பேருரை ஆற்ற உள்ளார். மேலும் தமிழக முஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவுத் அவர்களும் சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதியுமான நாகர்ஜ்சுனன் ஆகியோரும் இந்நிகவில் சிறப்புரையாற்றுகின்றனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மேயர் பொன் சிவபாலன் நினைவு நிகழ்வு : எஸ் அரவிந்தன் & வி அருட்சல்வன்

Wednesday 10 September 2008

இந்தியாவின் டாட்டா கார் உற்பத்தி இலங்கையில்…

இந்தியாவின் புகழ் பெற்ற டாட்டா நிறுவனத்தின் கார் உற்பத்தி திட்டத்திற்கான காணி தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் அந்த தொழிற்சாலையை இலங்கையில் நிறுவுவதற்குரிய வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலங்கை முன்வந்துள்ளதாக அறியவருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியாவின் டாட்டா கார் உற்பத்தி இலங்கையில்…

இந்திய அணு உடன்படிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும் - கொண்டலிஸா ரைஸ்

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற இன்னும் குறுகிய கால அவகாசமே உள்ளதாக வெளிநாட்டமைச்சர் கொண்டலிஸா ரைஸ் தெரிவித்துள்ளார். வியன்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு ஏகமனதாக இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறவேண்டும்...


முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய அணு உடன்படிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும் - கொண்டலிஸா ரைஸ்

Monday 8 September 2008

பிந்திய செய்தி - கொழும்பு பெட்டாவில் குண்டுவெடிப்பு! 10 பேர் காயம். இருவர் நிலை கவலைக்கிடம்.

இன்று இரவு 9.30க்கு கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் (பெட்டாவில்) குண்டுவெடிப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பத்தில் 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் நிலை கவலைக்கிடமானது என தேசிய வைத்தியசாலை சிரேஸ்ட வைத்திய அதிகாரி ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி - கொழும்பு பெட்டாவில் குண்டுவெடிப்பு! 10 பேர் காயம். இருவர் நிலை கவலைக்கிடம்.

காற்றினில் கரைந்த பெருமகன்… : ‘விம்பம்’

அமரர் N.S. கந்தையா
மண்ணில்: 07. 09. 1922
விண்ணில்: 26. 08. 2008

லண்டனுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வரலாற்றில் மிகமூத்த தமிழ்ப் பிரமுகராகத் திகழ்ந்த திரு N.S. கந்தையா அவர்களின் மறைவு, நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் தமிழர் விவகாரங்களில் பணியாற்றிய ஒரு சிறந்த சேவையாளரின் பாரிய இழப்பாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காற்றினில் கரைந்த பெருமகன்… : ‘விம்பம்’

எந்தத் தாய்க்கும் இந்நிலை ஏற்படக் கூடாது!!! - நிலாந்தனின் தாய் கலா மூர்த்தி : லண்டன் குரல்

எந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்குத் தெரிவித்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று வேதனையுடன்…

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எந்தத் தாய்க்கும் இந்நிலை ஏற்படக் கூடாது!!! - நிலாந்தனின் தாய் கலா மூர்த்தி : லண்டன் குரல்

யுனெஸ்கோ பாரிஸ் மாநாட்டிலிருந்து புலி ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் நடைபெறும் யுனெஸ்கோவின் 61வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புலிகளின் ஆதரவு அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யுனெஸ்கோ பாரிஸ் மாநாட்டிலிருந்து புலி ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Saturday 30 August 2008

பல்கலைக்கழக மாணவ சமுதாயம் மௌனம் கலைய முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அநீதிகளை அகற்றி மனித உரிமைகளைப் பேணவும் தனிமனித சுதந்திரத்தை மதிக்கவும் மௌனங்களை கலைந்து முன்வரவேண்டும்” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்மை சந்திப்பதற்காக வந்த கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றம் மற்றும் தமிழ்மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட அறைகூவலை அமைச்சர் விடுத்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பல்கலைக்கழக மாணவ சமுதாயம் மௌனம் கலைய முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எண்ணெய் சுத்திகரிப்பு விஸ்தரிப்பு இலங்கை - ஈரான் ஒப்பந்தம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்குவது தொடர்பாக ஈரான் அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எண்ணெய் சுத்திகரிப்பு விஸ்தரிப்பு இலங்கை - ஈரான் ஒப்பந்தம்

வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரஸ்யம் தருபவர் பராக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜோன் மெக்கைன் போடியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி

மக்களை வெளியேறக் கோரி ஹெலி மூலம் துண்டுப்பிரசுரம்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களை போடும் நடவடிக்கையை விமானப் படையினர் ஆரம்பித்துள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மக்களை வெளியேறக் கோரி ஹெலி மூலம் துண்டுப்பிரசுரம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயத்தில் இனி வெளிப்படைத்தன்மை பேணப்படும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயத்தில் மோசடிகள், ஏமாற்றுகள், தில்லுமுல்லுகள் முதலானவை நடைபெறுவதைத் தவிர்ப்பதற்காக வெளிப்படைத்தன்மை பேணப்படும். அதன் பொருட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் திணைக்களத்தின் சகல கருமங்களும் வலைப்பின்னலில் பதியப்படும்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயத்தில் இனி வெளிப்படைத்தன்மை பேணப்படும்

பிந்திய செய்தி: புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு. 45 பேர் காயம்.

கொழும்பு புறக்கோட்டை அரச மரச்சந்தியில் உள்ள கைக் கடிகாரம் விற்கும் கடை ஒன்றின் அருகில் இன்று (30) நன்பகல் 12.15 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிந்திய செய்தி: புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு. 45 பேர் காயம்.

புலிகளால் கைது செய்யப்பட்டு ‘இல்லாமல் ஆக்கப்பட்ட’ செல்வியின் 17ம் ஆண்டின் நினைவாக…. : யசோதா

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளால் கைது செய்யப்பட்டு ‘இல்லாமல் ஆக்கப்பட்ட’ செல்வியின் 17ம் ஆண்டின் நினைவாக…. : யசோதா

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! - ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

பா உ ஜெயானந்தமூர்த்தி 1983 முதல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர். இதன் காரணமாக 1986ல் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பூசா மற்றும் வெலிக்கடை முகாம்களில் 36 மாதங்கள் தடுத்து வைக்கபட்டவர். 1989ல் விடுதலையாகி மீண்டும் தனது பொதுப்பணியில் ஈடுபட்டார். 1991ல் ஊடகவியலாளராக பணியை ஆரம்பித்தார். எந்த ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பிலும் உறுப்பினராக இருக்கவில்லை என்று தெரிவிக்கும் இவர் 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.கொடுப்பது. அப்படி ஒரு நிலை உருவானால் விடுதலைப் புலிகளதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நிலையென்ன ?....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! - ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன்

Friday 29 August 2008

கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப அரசு அவசர ஏற்பாடு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தடங்கலின்றி மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவையாளர் நாயகம் எஸ்.பி. திவாகரத்ன தெரிவித்தார்.

மோதல் உக்கிரமடைந்துள்ளதையடுத்து மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சிக்கு இடம்பெயரும் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப அரசு அவசர ஏற்பாடு

பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்கள் நால்வரை தாக்கிய கொழும்பு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் சிலர் அவர்களிடமிருந்த புகைப்படக்கமரா வீடியோ கமராக்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ‘லங்காதீப’ மற்றும் ‘சிரச’ ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்ää சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

மாகாண சபைகளுக்கான தேர்தல் வெற்றி அரசுக்கல்ல. படையினருக்கே உரியது. – சோமவன்ச அமரசிங்க

இரு மாகாணசபைத் தேர்தல்களிலும் அரசை மக்கள் வெற்றியடையச் செய்யவில்லை. மாறாகப் படையினரே வெற்றியடையச் செய்துள்ளனர். யுத்தம் என்ற போர்வையில் மக்களை அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தேர்தல் வெற்றியானது இராணுவத்தினருக்கான வெற்றியே அன்றி அரசுக்குரியதல்ல” - இவ்வாறு ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாண சபைகளுக்கான தேர்தல் வெற்றி அரசுக்கல்ல. படையினருக்கே உரியது. – சோமவன்ச அமரசிங்க

மாகாணத் தேர்தல்களில் அரசுக்குக் கிடைத்த வெற்றி இனவாதக் கருத்துகளுக்குக் கிடைத்த சன்மானம். - சுரேஸ் பிரேமச்சந்திரன்

“கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்கள மக்கள் இழுத்துச் செல்லப்பட்டுகின்றனர். இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மைச் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மாகாணத் தேர்தல்களில் அரசுக்குக் கிடைத்த வெற்றி இனவாதக் கருத்துகளுக்குக் கிடைத்த சன்மானம். - சுரேஸ் பிரேமச்சந்திரன்

கருணா குழுவின் பிரமுகர்கள் தமிழ்க் கைதிகளைச் சந்தித்தனர்.

தலை நகரிலும், சுற்றாடலிலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை மற்றும் நியூமகஸின் சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (கருணாகுழுவின்) பிரமுகர்கள் அண்மையில் நேரில் சென்று சந்தித்தனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருணா குழுவின் பிரமுகர்கள் தமிழ்க் கைதிகளைச் சந்தித்தனர்.

வன்னி மக்களின் அவலம் குறித்து ஐ.நா. தொடர்ந்தும் எச்சரிக்கை

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மேலும் 3,000 குடும்பங்கள் இடம்பெயரும் சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. ஜுன் மாதத்திற்குப் பின்னர் 18ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 74ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 1இலட்சத்து 34ஆயிரத்து 868ஆகக் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் தமது வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வன்னி மக்களின் அவலம் குறித்து ஐ.நா. தொடர்ந்தும் எச்சரிக்கை

அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர். : கலாபூசணம் புன்னியாமீன்

இலங்கையிலிருந்து வெளிவரும் முஸ்லிம்களுக்கான ஒரே தேசிய இதழான ‘நவமணி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் 2008.08.28ஆந் திகதி நேற்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரெனக் காலமானார். அன்னாரின் பூதவுடல் நேற்று (28) மாலை 5.30 மணியளவில் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதி மரணச் சடங்குகளில் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர். : கலாபூசணம் புன்னியாமீன்

Wednesday 27 August 2008

நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

கடந்த 15.08.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீன் அவர்கள் தாயகத்தில் மறைந்த செய்தி எம்மை வந்தடைந்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், நூலக உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் பேசப்பட்டவர். சிலாபம் புனித மரியாள் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய எஸ். எம். கமால்தீன் கொழும்பு சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தன் மேற்கல்வியைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும், நூலகவியலில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். பின்னர் கனடா ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் கலைமானிப்பட்டமும் பெற்றுக்கொண்டவர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.,...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

ஒரு தத்துவம் என்ற முறையில் ட்ரொஸ்கியவாதம் ஒரு செத்த குதிரைக்கு ஒப்பானது. ஆனால் அது இன்னமும் சில இடங்களில் முக்கி முனகிக் கொண்டு இருக்கின்றது எனலாம். இந்த முக்கல் முனகல்களை ஏதோ பெரிய முழக்கங்களாகக் காட்ட சிலர் முனைகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலை கீழாக நின்று முயற்சி செய்தாலும் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ட்ரொஸ்கியவாதம் பற்றி : மனோ

பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்

இலங்கை இன்று ஒரு ஆபத்தான அரசியற் கட்டத்தில் நிற்கிறது. இனத்துவேச அரசின் யுத்த முன்னெடுப்புகளும் - அதற்கு ஆதரவாக இயங்கும் குழுக்களின் அரசுசார் அரசியல் வித்தைகள் ஜனநாயகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதும் - புலிகள் மக்களை பணயம் வைத்து தமது குறுகிய யுத்தக் காய்ச்சலை வெளிப்படுத்த தயாராகுவதுமாக –‘அதிகார சக்திகள்’ கடும் முரண்;களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆதன் பலனாக ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை வரலாறு காணாத வறுமையையும் வன்முறையையும் எதிர்நோக்கி உள்ளார்கள். குறிப்பாக வன்னி மக்களின் எதிர்காலம் நினைத்துப் பார்க்க நடுக்கமேற்படும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்

Monday 25 August 2008

பிரிட்டனிலிருந்து 4 இலங்கையர் நாடு கடத்தப்படும் நிலை

பிரிட்டனில் உணவு விடுதியொன்றில் பணியாற்றிய இலங்கையர் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதுடன் தற்போது நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் எல்லைக்காவல் அமைப்பின் அதிகாரிகளே ஹாம்ஸ்சையர் பகுதியில் தேடுதல் நடத்தி இவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்கிறார்களென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரிட்டனிலிருந்து 4 இலங்கையர் நாடு கடத்தப்படும் நிலை

மலையக தமிழ்க் கட்சிகளுக்கு சப்ரகமுவ மாகாணசபையில் ஒரு ஆசனமும் இல்லை

சப்ர கமுவ மாகாண சபையின் நிர்வாகத்தை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ள அதேநேரம், இந்த மாகாண சபையின் வரலாற்றில் தமிழ்க் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை முதன்முறையாக இழந்துள்ளன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையக தமிழ்க் கட்சிகளுக்கு சப்ரகமுவ மாகாணசபையில் ஒரு ஆசனமும் இல்லை

ஜாதிக ஹெலஉறுமயவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக ஜாதிகஹெல உறுமய வெளியிட்ட கருத்தை மறுப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- ...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜாதிக ஹெலஉறுமயவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - துணைவேந்தர் கலாநிதி என். பத்மநாதன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீதிபதிகள் நியமனம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படைநடவடிக்கைகள் முற்றுப் பெற்றவுடன் நீதிமன்றங்களையும் பொலிஸ் நிலையங்களையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரச தரப்பு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீதிபதிகள் நியமனம்

Sunday 24 August 2008

பிரபாவின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் நாள் நெருங்குகின்றது! - நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றும் வெகுவிரைவில் படையினர் அதைச் செய்வர் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று முன்தினம் (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரபாவின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் நாள் நெருங்குகின்றது! - நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

தமிழ் மாணவர்கள் கல்வியியல் சாதனைகள் தொடர்கிறது. : த ஜெயபாலன்

அண்மைக் காலமாக லண்டனில் இருந்து வரும் தமிழர் பற்றிய செய்திகள் துக்ககரமானதாகவும் வேதனையாகவுமே இருந்தது. அதலிருந்து சற்று விடுபட்டு ஆறுதலடையும் வகையில் எமது மாணவர்கள் தங்கள் கல்வியியல் சாதனையை நிலைநாட்டி உள்ளனர். இவ்வாண்டு நடைபெற்ற GCSE பரீட்சைகளிலும் வழமை போல் எமது மாணவ, மாணவிகள் சாதனைகளை நிலைநாட்டி உள்ளனர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மாணவர்கள் கல்வியியல் சாதனைகள் தொடர்கிறது. : த ஜெயபாலன்

யாழ்ப்பாணத்தில் விரைவில் உள்ளுராட்சி தேர்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவது பற்றி அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. 19 உள்ளுராட்சி மன்றங்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் கடைசியாக 2002ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாண நகரசபை உட்பட 3 நகரசபைகள் 15 பிரதேச சபைகள் விசேட ஆணையாளர்களின் நிர்வாகத்தில் உள்ளன. வடமாகாண விசேட செயலணிக்குப் பொறுப்பான அமைச்சரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாணத்தில் விரைவில் உள்ளுராட்சி தேர்தல்

Saturday 23 August 2008

50 % அதிகமான வாக்குகளை மகிந்த முன்னணி பெற்றுள்ளது!! பொலன்னறுவையில் UPF 6 அசனங்கள், UNP 4 ஆசனங்கள் : த ஜெயபாலன் & மொகமட் அமீன்

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள சகல தொகுதிகளிலுமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 50 முதல் 60 வீதமான வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் படி: தேர்தல் முடிவு வெளிவந்துள்ள 17 தொகுதிகளில், அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
50 % அதிகமான வாக்குகளை மகிந்த முன்னணி பெற்றுள்ளது!! பொலன்னறுவையில் UPF 6 அசனங்கள், UNP 4 ஆசனங்கள் : த ஜெயபாலன் & மொகமட் அமீன்

Friday 22 August 2008

நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

கடந்த 15.08.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு தமிழ் அறிஞர் எஸ். எம். கமால்தீன் அவர்கள் தாயகத்தில் மறைந்த செய்தி எம்மை வந்தடைந்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், நூலக உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் பேசப்பட்டவர். சிலாபம் புனித மரியாள் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய எஸ். எம். கமால்தீன் கொழும்பு சாஹிரா கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் தன் மேற்கல்வியைத் தொடர்ந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும், நூலகவியலில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். பின்னர் கனடா ரொரன்டோ பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் கலைமானிப்பட்டமும் பெற்றுக்கொண்டவர்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நல்லாசான் எஸ்.எம். கமால்தீன்: வாழ்வும் பணியும். : என்.செல்வராஜா

மேயர் பொன் சிவபாலன் 10வது ஆண்டு நினைவு: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்

யாழ் மேயராக இருந்து படுகொலை செய்யப்பட்ட பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் லண்டனில் செப்ரம்பர் 14ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 1988 செப்ரம்பர் 11ல் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் மேயர் பொன் சிவபாலன் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். யாழ் நகர மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 10வது ஆண்டு நிறைவையும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் செய்யப்பட்ட 60வது ஆண்டு தினத்தையும் குறிக்கும் வகையில் மேயர் பொன்சிவபாலனின் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘மேயர் பொன் சிவபாலன் நினைவு : மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்விற்கு பொன் சிவபாலனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட எஸ் சுதாகரன் தலைமை தாங்குகிறார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மேயர் பொன் சிவபாலன் 10வது ஆண்டு நினைவு: மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளல்

தீகவாவி பிரதேச பௌத்த மக்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் திட்டம்.

தீகவாபி பௌத்த மக்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் வேலைத்திட்டம் சிறந்த வெற்றியளித்துள்ளதாக முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை பிராந்தியப் பணிப்பாளர் திருமதி முபீதா உஸ்மான் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீகவாவி பிரதேச பௌத்த மக்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் திட்டம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்குள் தெரிவான தென்னிலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியாக்கிரகம்

தென் னிலங்கை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய முடிவு கிட்டும் வரை இப்போராட்டத்தைத் தொடரப்படும் எனவும் கூறினர்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாணப் பல்கலைக்குள் தெரிவான தென்னிலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியாக்கிரகம்

கடந்த 2 வாரத்தில் ‘40ஆயிரம்’ பேர் வன்னியில் அகதிகளானர்

கடந்த 2 வாரத்துக்குள் மாத்திரம் வன்னி மாவட்டத்தில் யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 40ஆயிரம் சாதாரண பிரஜைகள் அகதிகளாக்கப்பட்டுள்ளனரென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிதிதியின் காரியால ஊடகத்துறை அதிகாரி ‘சரசி விஜயரத்ண’ “அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுள: இடத்துக்கு இடம் கொண்டு செல்லக்கூடிய கூடாரங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளது” என்றார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடந்த 2 வாரத்தில் ‘40ஆயிரம்’ பேர் வன்னியில் அகதிகளானர்

இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வாகமாட்டாது! – இரா. சம்பந்தன்

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வாகமாட்டாது! – இரா. சம்பந்தன்

அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

தெற்கு லண்டனில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிசார் இன்னமும் தொடர்கின்றனர். சம்பவத்தில் கொல்லப்பட்ட சஞ்சயன் நவநீதன் (5), சாரனி நவநீதன் (4) இரு சிறார்களதும் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று (ஓகஸ்ட் 21) லண்டனில் நடைபெறுகிறது. பிரேத பரிசோதணைகள் யூன் 3ல் கிரேட் ஓர்மன் ஸ்ரீற் மருத்துவமனையில் முடிந்த போதும் அவர்களது உடல் உறவினர்களுக்கு கையளிக்கப்படாமலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அந்த மழழைகளின் இறுதி நிகழ்வு : த ஜெயபாலன்

Wednesday 20 August 2008

புலிகளின் தமிழீழ கனவு முற்றாக கலைந்துவிட்டது - சிவநேசதுரை சந்திரகாந்தன்

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி பொது மக்கள் உட்பட எவருமே துணைபோகக் கூடாது. புலிகளின் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே கிழக்கு மண்ணைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளின் தமிழீழ கனவு முற்றாக கலைந்துவிட்டது - சிவநேசதுரை சந்திரகாந்தன்

பாசிஸ்டுகளும் (புலிகளும்) பச்சோந்திகளும் (புலி எதிர்ப்பாளர்களும்) : பாண்டியன் தம்பிராஜா

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, பௌத்த, பேரினவாத அரசுகள் ஏற்படுத்தியமையும், அந்த இரசாயன தாக்கத்தின் விளைவாக பாசிஸ கூட்டமான புலிகள் உருவாகியமையும் எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. இலங்கையில் மக்கள் சிந்திய இரத்தமும், பிய்த்தெறியப் பட்ட அவர்களின் உடல்களுமே எமக்கெல்லாம் குடியுரிமைகளை பெற்றுத் தந்ததை மறந்து நாம் எங்கேயோ, எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பாசிஸ்டுகளும் (புலிகளும்) பச்சோந்திகளும் (புலி எதிர்ப்பாளர்களும்) : பாண்டியன் தம்பிராஜா

பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று : யமுனா ராஜேந்திரன்

சுதந்திரத்திறகான போராட்டம் பற்றிய கதை என்பது திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. திரும்பத் திரும்பவும் அது நிகழ்கிறது. எந்தக் காலமும் இந்தக் கதையைச் சொல்வதற்கான பொருத்தமான காலம்தான். உலகத்தில் எப்போதுமே ஏதோ ஒரு இடத்தில் ரரணுவ ஆக்கிரமிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். பிரித்தானியப் படைகள் இப்போது எங்கே இருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. துரதிருஸ்டவசமான, வன்முறை நிறைந்த, சட்டவிரோதமான ராணுவ ஆக்கிரமிப்பு இப்போது எங்கே நடந்து கொண்டிருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. எனது திரைப்படம் அன்னிய ஆக்கிரமிப்பு குறித்தது. அதனோடு அசாதாரணமான தோழமையும் வீரமும் குறித்தது. அதனோடு இந்தக் கதையினுள் இடம்பெறும் தோழர்களுக்கு இடையிலான துயரகரமான முரண்பாடு குறித்தது. அறுதியில் பார்க்கிறபோது நாம் தவிர்க்க முடியாத ஒரு கதையாக இது இருக்கிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று : யமுனா ராஜேந்திரன்

Monday 18 August 2008

”யாழ்நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்!!!” - நெவில் ஜெயவீர : த ஜெயபாலன்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன் என முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நெவில் ஜெயவீர தெரிவித்தார். The Jaffna Public Library Rises From Its Ashes என்ற யாழ் பொது நூலகத்தின் கட்டிடக் கலைஞர் வி எஸ் துரைராஜா எழுதிய நூலின் வெளியீட்டு விழாவில் நெவில் ஜெயவீர இதனைத் தெரிவித்தார். தான் இந்நிகழ்வில் கலந்தகொள்வதில் ஒருபுறம் மகிழ்ச்சி அடைவதாகவும் மறுபுறம் கவலையடைவதாகவும் தெரிவித்த நெவில் ஜெயவீர, தனது உணர்வின் வெளிப்பாட்டுக்கான காரணத்தையும் அங்கு தெரிவித்தார். யாழ் நூலகம் தமிழ் மக்களின் செல்வம் கொழிக்கும் கலாச்சாரித்தின் ஞாபகச் சின்னமாக இருப்பதால் இந்நிகழ்வில் கலந்த கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். அதேசமயம் அந்த ஞாபகச் சின்னத்தை தன்னினத்தைச் சேர்ந்தவர்கள் எரித்தனர் என்பதையிட்டு வெட்கப்படுவதாகவும் நெவில் ஜெயவீர தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”யாழ்நூலகம் எரிக்கப்பட்டதற்கு எனது மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்!!!” - நெவில் ஜெயவீர : த ஜெயபாலன்

27- பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! – மீள் ஆய்வு.

எந்தவித ஆதாரமுமற்று யாரோ காழ்புணர்வில் கூறிவிட்டார்கள் என்பதற்காய் தாங்களும் ஆராயாமல் அதனை ஏற்றுக்கொண்டு எனைத் தாக்குவது ஒரு தரமாக இலக்கியவாதிக்கான அடையாளம் அல்ல. நான் உண்மையிலேயே உங்களை இதுவரை அறிந்ததில்லை. நான் புளொக்கை விட்டுப் போய் பல மாதங்களாகிவிட்டது. அதிகம் இணையத்தளங்களை வாசிப்பதில்லை. வெறும் அறிவித்தல்களை மட்டும் அவ்வப்போது பார்வையிடுவதுடன் சரி. தனிப்பட்ட கோபம் ஒன்றும் தங்களிடமில்லை. நான் உங்கள் பெயரை பெண்கள் சந்திப்பிற்காக உபயோகித்திருப்பதாகத் தாங்கள் எழுதியிருந்தது எனக்கு விசனத்தைத் தந்தது அவ்வளவே...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
27 - பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! – மீள் ஆய்வு.

தமிழ் மக்களை தன் பக்கம் ஈர்க்க அரசு செய்யப் போவது என்ன? - பிளேட்டோ

இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சிங்கப்பூரில் வெளியாகும் ‘ஸ்ரேட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்று அரசியல்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான சண்டையில் வெற்றி பெறலாம். ஆனால், அவர்கள் போரில் வெற்றி…

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழ் மக்களை தன் பக்கம் ஈர்க்க அரசு செய்யப் போவது என்ன? - பிளேட்டோ

Saturday 16 August 2008

பர்வேஸ் முஸர்ரப் பதவி விலகவில்லை.

பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஸர்ரப் நேற்றுமுன்தினம் (14) பதவி விலகுவாரென பொதுவாக இந்திய, பாக்கிஸ்தானிய ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்திருந்தன. விசேடமாக பாக்கிஸ்தானின் சுதந்திரதின உரையில் மேற்படி அறிவித்தலை பர்வேஸ் முஸர்ரப் விடுப்பாரென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 14ஆம் திகதி தனது சுதந்திரதின உரையினை நிகழ்த்திய முஸர்ரப் தமது பதவி துறப்பு பற்றியோ, தனக்கெதிரான குற்றப் பிரேரணைப் பற்றியோ எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பர்வேஸ் முஸர்ரப் பதவி விலகவில்லை.

இன்று தென்னாபிரிக்கா சுதந்திரப் போராட்டத்தில் ‘காந்தி’ பங்கேற்ற - நூற்றாண்டு விழா

தென்னாபிரிக்க சுதந்திரப் போரின் ஒரு பகுதியாக 1908இல் மகாத்மா காந்தி பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டமையை நினைவுகூரும் நூற்றாண்டு விழா இன்று 16ஆம் திகதி தென்னாபிரிக்க ஜோகன்ஸ் பர்க்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்திய அரசின் சார்பில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி பங்கேற்கவுள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று தென்னாபிரிக்கா சுதந்திரப் போராட்டத்தில் ‘காந்தி’ பங்கேற்ற - நூற்றாண்டு விழா

அண்டை நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். - இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

சிக்கலான மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையிலும் சமரச முறையிலும் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாத பிரச்சினை எதுவுமில்லை என இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டுள்ள செய்திலேயே அவர் தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அண்டை நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். - இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

Friday 15 August 2008

வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்

வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவர் தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா! ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா? இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து சுட்டவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்

‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : அசோக்

அன்புடன் தோழர் சிவலிங்கம் அவர்களுக்கு,

வணக்கம். வாழ்த்துக்கள். இவ்வாறனாதொரு கடிதத்தை எழுத நேர்ந்தமைக்காக நான் என்னுள் உண்மையிலேயே சங்கடம் கொள்கின்றேன். உங்கள் தொடர்பாய் என்னுள் அன்பும் மரியாதையும் என்றும் உண்டு. இலங்கை இடதுசாரி அரசியல் பாரம்பரியம் கண்டவர் நீங்கள். மார்க்ஸ்;சிய விஞ்ஞான அடிப்படையில் இலங்கை அரசியல் பொருளாதார சமூகத்தையும் தேசிய நெருக்கடியையும் விண்டுரைக்க வல்லவராய் நீங்கள் உள்ளீர்கள். அதேவேளை இன்றைய புகலிட உலகத்தில் மலிந்துகிடக்கும் அரசியல் சீரழிவுகளில் இருந்து மாறுகொண்ட குறைந்தபட்ச ஒரு அரசியல் நேர்மை கொண்ட நபராக நீங்கள் இருப்பதாய் என்னுள் ஓர் கணிப்பீடு உண்டு....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : அசோக்

இலங்கையின் எதிர்காலம் என்ன? - கலந்துரையாடல் : செழியன் (கனடா)

இலங்கையில் எல்லா சிறுபான்மை இனங்களுக்குமான நீதியான, கௌரவமான அரசியல் தீர்வு கிடைப்பதன் மூலமே இலங்கையில் தற்போது நிழ்ந்து கொண்டிருக்கும் கொடிய யுத்தம் நிரந்தரமாக முடிவுக்கு வரும்’ என்று ‘சமாதானத்திற்கான கனேடியர்கள்’ என்ற அமைப்பு நம்புகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையின் எதிர்காலம் என்ன? - கலந்துரையாடல் : செழியன் (கனடா)

ஆயுதத்தைக் கைவிட்டு பிரபாகரன் சரணடையும் வரை யுத்தம் தொடரும் - கெஹலிய ரம்புக்வெல்ல

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்புப் பேச்சாளமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆயுதத்தைக் கைவிட்டு பிரபாகரன் சரணடையும் வரை யுத்தம் தொடரும் - கெஹலிய ரம்புக்வெல்ல

காங்கேசந்துறைக் கடலில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்ற இந்தியா உதவும் ?

காங்கேசந் துறை துறைமுகத்தில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்றுவதற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் நெருக்கமடைவதையும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான புதுடில்லியின் ஆதரவையும் இது புலப்படுத்துகிறது என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
காங்கேசந்துறைக் கடலில் மூழ்கியுள்ள கப்பல்களை அகற்ற இந்தியா உதவும் ?

இன்று இந்தியாவின் 62வது சுதந்திர தினம்

இன்று இந்தியாவின் 62வது சுதந்திர தினமாகும். தீவிரவாதிகளின் மிரட்டலையொட்டி தமிழகத்தில் நடைபெறும் சுதந்திர விழாவிற்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று இந்தியாவின் 62வது சுதந்திர தினம்

தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் பெண்கள் சந்திப்பு தடை செய்யப்பட வேண்டும்! : தமிழச்சி

நாம் ஏன் பேசிக் கொண்டே இருக்கிறோம்…?
நாம் ஏன் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம்…?
நாம் ஏன் செயலாற்றுவதில்லை…?
நமக்கு மட்டும் ஏன் துரோகங்களை புறந்தள்ள முடிகிறது…?
நமக்கு தொடரும் வன்முறைகளையும், தீவிரவாதத்தையும்
எப்படி அலட்சியப்படுத்தி செல்ல முடிகிறது…?
நம்மிடம் மனிதம் இல்லையா…?
நம்மிடம் சமூகப்பற்று இல்லையா…?

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தீவிரவாதிகளை ஒன்றிணைக்கும் பெண்கள் சந்திப்பு தடை செய்யப்பட வேண்டும்! : தமிழச்சி

Wednesday 13 August 2008

27வது பெண்க்கள் சந்த்திப்பு கனடா - 2008 ஒரு பார்வை : மோனிகா

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
27வது பெண்க்கள் சந்த்திப்பு கனடா - 2008 ஒரு பார்வை : மோனிகா

Sunday 10 August 2008

மத்திய கிழக்கில் தொழில் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை யிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகமாக அதிகரித்துள்ளது என வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மத்திய கிழக்கில் தொழில் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும் : தமிழ்நதி

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும் : தமிழ்நதி

யாரொடு நோவது? யார்க்கெடுத்துரைப்பது? - SLDF இடம் ஒரு கேள்வி : சபா நாவலன்

புலம் பெயர் தமிழ் இலக்கியம், புலம் பெயர் சினிமா, புலம் பெயர் இணையம் என்றெல்லாம் வந்தாகிவிட்டது. புலம் பெயர் சூழலில் ஜனநாயக் குரல் முழைத்து, கொடி படர்த்தி, பூப் பூத்து இன்று மறுபடி சருகாய்ச் செத்துப் போனதோவென்று சாபக் குரல்கள் ஒலிக்கின்றன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாரொடு நோவது? யார்க்கெடுத்துரைப்பது? - SLDF இடம் ஒரு கேள்வி : சபா நாவலன்

ஜனாதிபதியின் ‘சார்க் சாமர்த்தியம்’ - இனப்பிரச்சினை தீர்வுக்கும் பயன்படட்டும்

சிறுபான்மை கட்சிகளிடம் குறித்த திட்டத்தைச் சமர்ப்பித்து உரிய பேச்சுவார்த்தையை விரிவாக நடத்தினால் நல்ல பயன் கிடைக்கலாம். சிறுபான்மை மக்களால் ஏற்கக்கூடிய திட்மொன்றை ஜனாதிபதியின் வழிகாட்டல் மூலம் அரசினால் சமர்ப்பிக்க முடியுமென்றால் எல்.ரி.ரி.ஈ.யைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உத்தேச திட்டத்தை மக்கள் ஏற்கும் நிலை வந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படும் என இன்று (10) வெளியான ‘நவமணி’ பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனாதிபதியின் ‘சார்க் சாமர்த்தியம்’ - இனப்பிரச்சினை தீர்வுக்கும் பயன்படட்டும்

இலக்கிய சிந்தனை’ விருதுபெறும் புலம்பெயர் எழுத்தாளர் ‘மாதுமை’

சுவிஸில் இருந்து மாதுமை எழுதிய ‘லாவண்யா திண் வைகுந்தன்’ எனும் சிறுகதை ஏப்ரல் மாதத்தின் சிறந்த சிறுகதையாக ‘இந்திய இலக்கிய சிந்தனை அமைப்பு’ தெரிவு செய்து விருது வழங்கியுள்ளது. இவரது தெரிவு செய்யப்பட்ட சிறுகதை ‘யுகமாயினி’ இதழில் வெளிவந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கிய சிந்தனை’ விருதுபெறும் புலம்பெயர் எழுத்தாளர் ‘மாதுமை’

புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கின்றார் - பிரிட்டன் பாடகி MIA

இலங்கை வம்சாவளியினரான MIA என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கின்றார் - பிரிட்டன் பாடகி MIA

திருமலையில் பாலியல் துஸ்பிரயோகம் பெருமளவில் இடம்பெறுகின்றது - மேல்நீதிமன்ற நீதிபதி

திருகோண மலை மாவட்டத்தில் குச்சவெளி, சீனக்குடா, தம்பலகாமம், கேடுநுவர, கந்தளாய் போன்ற பிரதேசங்களில் பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்கள் பெருமளவில் இடம்பெறுகின்றன. திருமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் 60 சதவீதமானவை பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தப்பட்டவையே. அவற்றிலும் 50 சதவீதமானவை 14 வயதுக்கு கீழ்க்கப்பட்டசிறார்கள் மீது புரியப்பட்ட குற்றங்களாகும். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்’ - இவ்வாறு எச்சரித்தார் திருமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
திருமலையில் பாலியல் துஸ்பிரயோகம் பெருமளவில் இடம்பெறுகின்றது - மேல்நீதிமன்ற நீதிபதி

ஆசிய பாராளுமன்றத்தை உருவாக்கும் பணியை ஈரான் முன்னெடுக்கும்

ஈரான் இஸ்லாமியக் குடியரசு சார்க் அமைப்பில் அவதானிப்பாளராக இருக்கும் அதேவேளை, ஆசிய பாராளுமன்றத்தை உருவாக்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும்’ என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மனுசர் மொத்தக்கி தெரிவித்தார். சார்க் உச்சி மாநாட்டில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அமைச்சர் மொத்தக்கி பத்திரிகையோன்றிற்கு வழங்கிய விசேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆசிய பாராளுமன்றத்தை உருவாக்கும் பணியை ஈரான் முன்னெடுக்கும்

மஹ்முத் தர்வீஸ் : நம் காலத்தின் மனசாட்சி : யமுனா ராஜேந்திரன்

பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்முத் தர்வீஸ், தமது 67 ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமடைந்திருக்கிறார். திறந்த இதய சிகிச்சை நெருக்கடி நிலைமையை அடைந்ததனையடுத்து, இரண்டு நாட்களாக உயிர்காப்பு சிகிச்சை நிலைமையிலிருந்த மஹ்முத் தர்வீஸ் சனிக்கிழமை மதியம் மரணமடைந்திருக்கிறார். இவரது மறைவையொட்டி மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கபபடுமென பாலஸ்தீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.


முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மஹ்முத் தர்வீஸ் : நம் காலத்தின் மனசாட்சி : யமுனா ராஜேந்திரன்

Friday 8 August 2008

இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும். - விமல் வீரவன்ச

இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் செய்யப்படவுள்ள ‘சீபா’ எனப்படும் முற்று முழுதான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இலங்கை கைவிட வேண்டுமென்று விமல்வீரவன்ச பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையில் இந்தியாவின் கையோங்கி இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும் என்றும் இந்த ஒப்பந்தத்தை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை இந்தியாவின் 26வது மாநிலமாக மாறிவிடும். - விமல் வீரவன்ச

அரசின் நிபந்தனைகளை ஏற்கும்வரை யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை - கெஹலிய ரம்புக்வெல்ல

“முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. அரசாங்கத்தின் நிபந்தனைகள் ஏற்றாலேயொழிய புலிகளின் போர் நிறுத்தத்தையோ, சமாதானப் பேச்சுவார்த்தைகளையோ ஏற்கப் போவதில்லை” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
அரசின் நிபந்தனைகளை ஏற்கும்வரை யுத்தநிறுத்தத்திற்கு இடமில்லை - கெஹலிய ரம்புக்வெல்ல

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் ‘கியூ’ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் பொலிஸார் முடிவு செய்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு

ஓன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு விடுதலையை விரைவில் வென்றெடுப்போம் - பா. நடேசன்

ஒன்றுபட்ட சக்தியாக அனைவரும் அணிதிரண்டு எமது தேசத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்’ என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வட்டக்கச்சி கோட்ட போர் எழுச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஓன்றுபட்ட சக்தியாக அணிதிரண்டு விடுதலையை விரைவில் வென்றெடுப்போம் - பா. நடேசன்

Wednesday 6 August 2008

இந்தியத் தேசியக்கொடியை கச்சதீவில் ஏற்ற நடவடிக்கை

இந்திய சுதந்திர தினத்தன்று கச்சதீவில் தேசியக்கொடியை ஏற்றப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தஞ்சையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியவை வருமாறு:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியத் தேசியக்கொடியை கச்சதீவில் ஏற்ற நடவடிக்கை

சார்க் பிராந்திய நாடுகளின் செயற்பாட்டிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் - அமெ. உதவிச் செயலாளர் ரிச்சட் பவுச்சர்

சார்க் பிராந்திய நாடுகள் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஜனநாயகத்தை விஸ்தரிப்பதற்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் அமெரிக்க உதவிச் செயலாளர் ரிச்சட் ஏ. பவுச்சர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சார்க் நாடுகளுடன் இணைந்து செயற்படவும் தயாராகவுள்ளதாக அவர் மேலும் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க் பிராந்திய நாடுகளின் செயற்பாட்டிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும் - அமெ. உதவிச் செயலாளர் ரிச்சட் பவுச்சர்

தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் கடும் தண்டனை வழங்க குவைத் அரசு தீர்மானம்

குவைத்தில் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவது மற்றும் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான புதிய சட்ட மூலமொன்று குவைத் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பாராளுமன்ற மனித உரிமைகள் குழு இப்புதிய சட்ட மூலத்தை இயற்றியுள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தொழிலாளர்களை கொடுமைப்படுத்தினால் கடும் தண்டனை வழங்க குவைத் அரசு தீர்மானம்

‘சீபா’ ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

இந்தியாவுடன் இலங்கை அரசு செய்வதற்குத் திட்டமிட்டிருக்கும் விசால பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தத்துக்கு (Comprehensive Economic Partnership Agreement– CEPA) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை யார் எதிர்த்தாலும் எதிர்ப்பவர்களை ஓரத்தில் ஒதுக்கிவிட்டு அரசு இதில் கைச்சாத்திட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சீபா’ ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் - பெ. சந்திசேகரன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும் அரச சமூகத்தினர் அபிவிருத்திச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் இந்தியா முழுமையாக உதவ வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திசேகரன் கொழும்பில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அச்சமயம் அமைச்சரினால் இந்தியப் பிரதமரிடம் ஒரு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம்மகஜரில் காணப்பட்ட முக்கிய விடயங்களாவன:....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய வம்சாவளி மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா முழுமையாக உதவ வேண்டும் - பெ. சந்திசேகரன்

இந்திய பிரதமர் மன்மோகன், ஜனாதிபதி மஹிந்தவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகள் ?

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையில் உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களும் தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் மன்மேகன்சிங்ää சார்க் உச்சிமாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்ததோடு இந்தியாவுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இருதரப்பு உறவை வலுவாக்குகிறதெனக் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்திய பிரதமர் மன்மோகன், ஜனாதிபதி மஹிந்தவுடன் அந்தரங்கப் பேச்சுவார்த்தைகள் ?

கிழக்கு மக்கள் சோற்றுக்கா சுதந்திரத்தை விற்பவர்களல்லர் - விடுதலைப் புலிகள் அறிக்கை

கிழக்கு மக்கள் சோற்றுக்காகச் சுதந்திரத்தை விற்பவர்கள் அல்லர் என்பதை அனைவருக்கும் காட்டவேண்டிய தருணம் வந்துவிட்டதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு மக்கள் சோற்றுக்கா சுதந்திரத்தை விற்பவர்களல்லர் - விடுதலைப் புலிகள் அறிக்கை

Monday 4 August 2008

கிழக்கு லண்டன் இலவச படக்காட்சி : த ஜெயபாலன்

ஓகஸ்ட் 10ல் குவாக்கர்ஸ் மண்டபத்தில் (லண்டன் லேய்டன்ஸ்ரோன்) கனடியத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட ‘சகா’ என்ற படம் காண்பிக்கப்பட இருக்கிறது. ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் தேசம் சஞ்சிகையும் ஈழவர் திரைக்கலை மன்றமும் இணைந்து இக்குறும்படக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இக்குறும்படக் காட்சி நிகழ்வில் சகா திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறும். மேலும் அடுத்த குறும்படக்காட்சி பற்றிய கலந்துரையாடலும் மேற்கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை எவ்வாறு சூழற்சி முறையில் கொண்டு செல்வது என்பது பற்றியும் ஆராயப்படும். வர்த்தக சினிமாவுக்கு அப்பால் உள்ள சினிமாவுடன் அறிமுகமாக விரும்புபவர்களையும் ஏற்கனவே மாற்று சினிமாவில் தங்களை ஈடுபடுத்தி உள்ளவர்களையும் ஏற்பாட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கிழக்கு லண்டன் இலவச படக்காட்சி : த ஜெயபாலன்

வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

இன்று (ஓகஸ்ட் 4) காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான ஒரு எதிர்காலம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் இவ்விளைஞர் இந்த விபரீத முடிவுக்குச் சென்றுள்ள செய்தி கேட்டு அகிலனுடைய பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இருபது வயது மாணவன், எப்போதும் மகிழ்ச்சியான சுபாவமுடைய அகிலனின் முடிவு அவருடை பெற்றோருக்கு பேரிடியாக அமைந்து உள்ளது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! : த ஜெயபாலன்

இந்தியப் பிரதமருடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேச்சு

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு வந்துள்ள மன்மோகன்சிங்கை தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்து பேச்சு நடத்தின. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன கடந்த வெள்ளிக்கிழமை(01) இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியப் பிரதமருடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக பேச்சு

பயங்கரவாதத்தை துடைத்தெறிய பிராந்திய நாடுகள் கூட்டாக போராட வேண்டும் - பாக். பிரதமர் கிலானி

தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தைத் துடைத்தெறிவதற்காகத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நாம் போராட வேண்டும் என்று பாக்கிஸ்தான் பிரமர் யூசுப் ராசா கிலானி சிலதினங்களுக்கு முன்னர் கொழும்பில் தெரிவித்தார்.

அதேநேரம், இவ்வருடத்தின் பிற்பகுதியில் பாக்கிஸ்தானின் தலைநகரில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களதும், பொலிஸ் மா அதிபர்களதும் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பயங்கரவாதத்தை துடைத்தெறிய பிராந்திய நாடுகள் கூட்டாக போராட வேண்டும் - பாக். பிரதமர் கிலானி

கொழும்பு – மாத்தறை ரயில் பாதை புனரமைப்புக்கு இந்தியா ஏன்? - டில்வின் சில்வா

கொழும்பு முதல் மாத்தறை வரையிலான புகையிரத பாதையை புனரமைப்பு செய்வதற்காக நிதியை கடனாக வழங்குவதும் இந்தியா புனர்நிர்மான பணியை நிறைவேற்றப்போகும் நிறுவனமும் இந்தியாவுடையது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கொழும்பு – மாத்தறை ரயில் பாதை புனரமைப்புக்கு இந்தியா ஏன்? - டில்வின் சில்வா

நினைவுகள் மரணிக்கும் போது - நூற்றாண்டு காலத் தியானம் : யமுனா ராஜேந்திரன்

1

சிவானந்தனின் இந்நாவலை முற்று முழுதான அரசியல் நோக்கில் வாசிப்பதென்பது ஒருவர் இந்நாவலில் வாழும் மனிதர்களுக்குச் செய்கிற துரோகமாகும்.

கோடிக்கணக்காக மனிதர்களின் இடையில் வாழ நாம் தலைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு கடந்த காலத்தையும் நினைவுப் பிரபஞ்சத்தையும் கொண்டு திரிகிறோம். இதில் எவரிடம் தான் சொல்ல ஒரு கதையில்லை? இங்கு எவர்தான் முக்கியமற்றவர்?

இவர்கள் அனைவரிடமும் காதலும் வாழ்வும் மரணமும் மோகித்தலும் வெறுப்பும் சார்ந்ததொரு வாழ்வு இருக்கிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
நினைவுகள் மரணிக்கும் போது - நூற்றாண்டு காலத் தியானம் : யமுனா ராஜேந்திரன்

15வது சார்க் உச்சிமாநாடு நிறைவு. 4 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து. கொழும்புப் பிரகடனமும் வெளியீடு – முஹம்மட் அமீன்

இணக்கம் காணப்பட்ட விடயங்கள் : 1. தெற்காசிய அபிவிருத்தி நிதியம், 2. தெற்காசிய பிராந்திய தர நிர்ணயத்திற்கான உடன்பாடு, 3. குற்றவியல் சட்டங்கள் தொடர்பான பரஸ்பர உடன்பாடு, 4. தெற்காசிய வர்த்தக உடன்படிக்கையில் ஆப்கானிஸ்தானை இணைத்தல்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
15வது சார்க் உச்சிமாநாடு நிறைவு. 4 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து. கொழும்புப் பிரகடனமும் வெளியீடு – முஹம்மட் அமீன்

‘சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல’ என்ற ஊடகவியலாளர் நோர்வேயில் புலி ஆதரவாளரால் தாக்கப்பட்டார் : த ஜெயபாலன்

நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பகுதி உறுப்பினரால் தாக்கப்பட்டு உள்ளார். இவர் அங்கு விளையாட்டுத்துறை மற்றும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவருகிறது. யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது. குட்டி என்று அறியப்பட்ட பத்மநாதன் என்பவரே மக்கள் மத்தியில் வைத்து இக்கொடூரமான செயலைச் செய்துள்ளார். இச்சம்பவத்தில் பத்மநாதன் கிளாஸால் தாக்கியதில் கண்ணுக்கும் காதுக்கும் இடையே ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. உடனடியாக சரவணன் ஒஸ்லோ மருத்துவமனையின் உடனடிச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல’ என்ற ஊடகவியலாளர் நோர்வேயில் புலி ஆதரவாளரால் தாக்கப்பட்டார் : த ஜெயபாலன்

Sunday 3 August 2008

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையே பொருத்தமான தீர்வாக அமையும் என்ற தலைப்பில் சடகோபன் அவர்கள் ஆரம்பித்துள்ள கருத்துப் பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக இக்கட்டுரை அமைகிறது. இலங்கை இனப் பிரச்சனைக்குப் பல தீர்வுகள் அமையலாம். ஆனால் அவை யாவும் பொருத்தமான தீர்வாக அமையுமா? பொருத்தமானது என்ற சொற் பதம் பல அர்த்தங்களைக் கொண்டதாக அமைகிறது. அதாவது இலங்கையில் வாழும் ஏனைய இனங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், தற்போதுள்ள இறுக்கமான அரசியல் பின்புலத்திலிருந்து மாற்றங்களை நோக்கித் தள்ளி, ஓர் புதிய வழியை, ஜனநாயக இலக்குகளை நோக்கித் திருப்ப வேண்டும். திம்புக் கோரிக்கைகள் என்பது தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் அடிப்படைகளாக, தமிழ்பேசும் மக்களின் ஒன்றிணைந்த போராட்ட வெற்றிச் சின்னமாக இன்றுவரை விளங்கி நிற்பதாக தெரிவிக்கும் பீடிகையோடு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான நியாயங்களை முன்வைத்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
13வது திருத்தத்தைக் காட்டிலும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஏன் பொருத்தமற்றது : வி. சிவலிங்கம்

‘மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசியல் இலாபம் பெற முனைகின்றனர்’- ஹிஸ்புல்லாஹ்

திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடித்தடை ஏற்பட்டிருப்பதற்கான காரணம் அங்குள்ள பாதுகாப்பு காரணம் நிமித்தமே. இம்மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசாங்கத்தை பழிசுமத்துவதும் இதனை விமர்சிப்பதும் அரசியல் இலாபம் பெறுவதற்காகும். இவ்வாறு கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘மீன்பிடித் தடையை வைத்து சிலர் அரசியல் இலாபம் பெற முனைகின்றனர்’- ஹிஸ்புல்லாஹ்

கருத்தறியாமல், களநிலை தெரியாமல் செயற்படுவதால் விளைவுகள் மோசமாகும் - ஹக்கீம்

“சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் போராட்டங்களின் பின்தான் கிடைக்க வேண்டுமென்ற நிலையை மாற்றி அந்த உரிமைகளை வழங்கிய பின்தான் பெரும்பான்மை சமூகம் தனது பங்கை அனுபவிக்க ஆரம்பிக்க வேண்டும்” இது மர்ஹ{ம் அஸ்ரப் வெளியிட்ட கருத்து. இந்தக் கருத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலையில் தொடர்புபடுத்தி பார்ப்பது மிகப் பொருத்தமாக இருக்கும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கருத்தறியாமல், களநிலை தெரியாமல் செயற்படுவதால் விளைவுகள் மோசமாகும் - ஹக்கீம்

“விட்டுக்கொடுப்பில்லாதனால் தான்; சிறுபான்மை மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்”- டிலான் பெரேரா

“சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்கவிடாமல் தடுக்க முற்பட்டுள்ள பௌத்த மத குருமாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். முஸ்லிம்களது வீடுகளைத் தடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இவ்வாறு கவலையுடன் தெரிவித்தார் அமைச்சர் டிலான் பெரேரா....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
“விட்டுக்கொடுப்பில்லாதனால் தான்; சிறுபான்மை மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” - டிலான் பெரேரா

இன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்!!!

இன்று ஆகஸ்ட் 3ம் திகதி. காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் சுஹதாக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 03.08.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள மீரா ஜும்ஆப் பள்ளிவாயில், ஹசைனிய்யா பள்ளிவாயில்களில் இஸாத் தொழுகையில் (இரவு நேரத் தொழுகை) ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று ஏறாவூரில்12.08.1990இல் 112 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் காத்தான்குடி முஸ்லிம்கள் அம்பலாந்துறையில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி சுஹதாக்கள் (உயிர் நீத்தவர்கள்) தினம் அனுஸ்டிக்கப்படுகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்!!!

ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்றங்களை நடத்த முடியாது!- பிரதம நீதியரசர்.

“நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனினும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் புலிகள் நீதிமன்றச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்ற போதிலும் அவை மக்களைத் திருப்திப்படுத்தக் கூடியனவையாக இல்லை. ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதன் மூலம் மக்களுக்கு நியாயம் கிட்டாது” இவ்வாறு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆயுதம் தாங்கிய அமைப்புகளால் நீதிமன்றங்களை நடத்த முடியாது!- பிரதம நீதியரசர்.

Saturday 2 August 2008

இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதி

இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்குத் தொடர்ச்சியாக உதவியளிப்பதாக பாக்கிஸ்தான் உறுதியளித்துள்ளது. கொழும்பில் நடைபெறும் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஸா மஹ்மூத் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதி

இந்தியப் படை வருகையால் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் - சோமவன்ச அமரசிங்க

இந்திய இராணுவம் சார்க் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் எமது இராணுவம் சர்வதேச ரீதியில் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கட்சியின் அரசியல் பீடகூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியப் படை வருகையால் இலங்கை இராணுவத்துக்கு அவமானம் - சோமவன்ச அமரசிங்க

சார்க்மாநாடு பிராந்திய நலன்களை முன்நிறுத்துமா? அன்றேல் காற்றோடு சங்கமித்துவிடுமா? : முஹம்மட் அமீன்

இன்று (02.08.08) சார்க் நாடுகளின் 15வது உச்சிமாநாடு கொழும்பில் கூடுகின்றது. இன்று 02ஆம் திகதியும், நாளை 03ஆம் திகதியும் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்படலாம் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க்மாநாடு பிராந்திய நலன்களை முன்நிறுத்துமா? அன்றேல் காற்றோடு சங்கமித்துவிடுமா? : முஹம்மட் அமீன்

எதற்காக இந்த சார்க் மாநாடு : த ஜெயபாலன்

இன்று (ஓகஸ்ட் 2) ஆரம்பமாக உள்ள சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் மீண்டும் பயங்கரவாதம் முக்கிய இடத்தை பெறப் போவது பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின், காங்கிரஸ் பிரதமர் ஒருவர், 17 ஆண்டுகளுக்குப் பின், முதற் தடவையாக இலங்கைக்கு வந்து உள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையின் 60வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
எதற்காக இந்த சார்க் மாநாடு : த ஜெயபாலன்

Monday 28 July 2008

யாழ்ப்பாண நூலகக் கனவுகள் - மறுப்பும்! பதிலும்! : என் செல்வராஜா

யாழ்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதின் 27வது ஆண்டை நினைவிற்கொண்டு நூலகவியலாளர் என் செல்வராஜா ‘பாவம் பொது நூலகம்! மீண்டும் தனிமரமாகிவிட்டது! : சாம்பலில் இருந்து 27 ஆண்டுகள் ’ என்றொரு கட்டுரையை தேசம்நெற் இணையத்திற்காக எழுதி இருந்தார். இக்கட்டுரையின் சாரம்சத்தை தொகுத்து ‘யாழ்ப்பாண நூலகக் கனவுகள்’ என்ற தலைப்பில் கொழும்பில் இருந்து வெளியாகும் ஞானம் சஞ்சிகையிலும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இக்கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பிபிசி தமிழோசை, ஐபிசி வானொலியிலும் வெளியிட்டு இருந்தார். இவை தொடர்பாக யாழ்மாநகரசபை ஆணையாளர் மு பெ சரவணபவ நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு எழுதிய மடலையும் அதற்கு என் செல்வராஜா வழங்கிய பதிலையும் இங்கு பதிவு செய்கிறோம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யாழ்ப்பாண நூலகக் கனவுகள் - மறுப்பும்! பதிலும்! : என் செல்வராஜா

சந்திரிகாவின் உரிமைகளை அரசு பறித்தால் ஐ.தே.க. எதிர்க்கும்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சிவில் உரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனைக் கொள்கையளவில் எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1998இல் உருவாக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் தமது கட்சி இதனை எதிர்க்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சந்திரிகாவின் உரிமைகளை அரசு பறித்தால் ஐ.தே.க. எதிர்க்கும்!

முகாம்களுக்கு திரும்பாத படை வீரர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

”பயங்கர வாதத்தைத் தோற்கடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில், இறுதி வெற்றியின் பங்காளர் களாவதற்காக விடுமுறையில் வீடு சென்று கடமைக்குத் திரும்பாதிருக்கும் பாதுகாப்பு படைவீரர்கள் சகலரும் உடனடியாகத் தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும். இதன் மூலம் இராணுவ நீதிமன்றத்திற்கு முகம் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் (26) எச்சரிக்கை விடுத்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
முகாம்களுக்கு திரும்பாத படை வீரர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

மலையகத்திலும் புரட்சி உருவாகும். என்.கே. சிவாஜிலிங்கம்

இந்திய நாடு நமக்கு மிக அருகிலிருந்து இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதில் அந்நாடு பாராமுகமாயுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரி A+iy 27 சபையில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மலையகத்திலும் புரட்சி உருவாகும். என்.கே. சிவாஜிலிங்கம்

சார்க் மாநாடு ஆரம்பம். ஆட்சித் தலைவர்களின் மாநாடு ஓகஸ்ட் 2ல்

சார்க் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுக் (July 27) காலை கோலாகலமாக ஆரம்பமானது. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட உயர் அதிகாரிகளுக்கான மாநாடே நேற்றைய முதல்நாள் அமர்வில் இடம்பெற்றது. இந்த மாநாட்டிற்கு இலங்கை தலைமை வகித்து சார்க் மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் கிரேஸ் ஆசிர்வாதம் இந்தத் தலைமை பொறுப்பை வகித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க் மாநாடு ஆரம்பம். ஆட்சித் தலைவர்களின் மாநாடு ஓகஸ்ட் 2ல்

யூசுப் செயின் மரணம் (1926-2008) : அஞ்சலியாக ஒரு பட அறிமுகம் : யமுனா ராஜேந்திரன்

எகிப்திய இயக்குனர் யூசுப் செயினின் ‘செப்டம்பர் பதினொன்று’ குறித்த குறும்படத்தை, இயக்குனராக செயின் குறித்த ஒரு ‘சுயசித்திரம்’ எனவே குறிப்பிடலாம்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
யூசுப் செயின் மரணம் (1926-2008) : அஞ்சலியாக ஒரு பட அறிமுகம் : யமுனா ராஜேந்திரன்

துப்பாக்கிச் சூட்டால், நெடுங்குருதி நிகழ்வு புறக்கணிக்கப்பட்டது : வி அருட்சல்வன்

நேற்று (யூலை 27) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யூலை 1983 கலவரத்தை நினைவுகூரும் நெடுங்குருதி நிகழ்வு திட்டமிட்டபடி நிகழவில்லை. நிகழ்வின் பேச்சாளர்கள் சிலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பெரும்பாலும் அரசியல் ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பேச்சாளர்களும் ஏற்பாட்டாளர்களும் இன்னும் சிலரும் மட்டுமே இந்நிகழ்வில் கலந்தகொண்டதாக தெரியவருகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
துப்பாக்கிச் சூட்டால், நெடுங்குருதி நிகழ்வு புறக்கணிக்கப்பட்டது : வி அருட்சல்வன்

இலங்கையில் (இன)கலவரங்கள் : மாற்று நக்கீரன்

1883ம் ஆண்டு தலைநகரமான கொழும்பில் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும கலவரத்தில் ஈடுபட்டார்கள். பிரித்தானியர்களின் ஆதரவான அதிகாரம் கொண்ட மேலாதிக்க வாதிகளுக்கும், பௌத்த சிங்களப் பேரின வாதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது. பிரித்தானியர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக் கலவரத்தை அடக்கினார்கள். இக் கலவரத்தில்த் தங்கள் நன்மைக்காக அதிகாரத்துக்கு வருவதற்கும் - உயர் கல்வி கற்பதற்கும் - கொழும்பைத் தங்கள் தங்கள் பிரதேசமாகக் கருதியவர்களும், மதம் மாறிய யாழ் மேட்டுக் குடியினர்களும் பாதிக்கப்பட்டார்கள்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கையில் (இன)கலவரங்கள் : மாற்று நக்கீரன்

இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

1983 - 2008 நெடுங்குருதி’ நிகழ்வின் ஏற்பாட்டாளர் குகன் தெய்வேந்திரன் இன்று (யூலை 26) காலை பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யூலை 23 இரவு அவரது கடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றிய தாஸ் என்பவரே இச்சம்பவத்தில் காயப்பட்டு இருந்தார். இவர் இன்னமும் பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் கடுமையான காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது. இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக கடையின் ‘பெயரளவில் உரிமையானவர்’ பல மணிநேரம் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு இருந்தார். மேலும் காயமடைந்த தாஸ் என்பவரும் மருத்துவமனையில் பொலிசாரால் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

Sunday 27 July 2008

ஜூலைப் படுகொலை நிகழ்வுகள்: கொச்சைப்படுத்தப்படும் தியாகங்கள் : சபா நாவலன்

83ம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 13 இரணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்ட நிகழ்வின் எதிரொலி முழு இலங்கையிலும் அதிர்ந்தது. மிகப்பெரும் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்திருந்த இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு ஏக அதிகாரம் தேவைப்பட்ட நிலையில் போர் வெறியைச் சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்துவிட்டார். தாராள மயமாக்கப்பட்ட பொருளாதரக் கொள்கை, சிங்கள மக்களின் பொருளாதார வாழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கத்தால் அரசிற்கெதிரான வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டிருந்த 80 களின் ஆரம்பப் பகுதி நெருக்கடியான காலகட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. அநகாரிக தர்மபாலவினால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் அமைப்பாக்கப்படிருந்த பேரினவாதத்திற்குப் புத்தியிர் கொடுத்து மற்றய பிரச்சனைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதென்பது பின் காலனிய அரசுகளுக்குப் பின் வந்த எல்லா அரசுகளும் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகும். காலத்திற்குக் காலம்இ ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியின் தாக்க அளவிற்கேற்ப தேசிய இன அடக்கு முறையின் குரூரமும் மாறுபடும்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜூலைப் படுகொலை நிகழ்வுகள்: கொச்சைப்படுத்தப்படும் தியாகங்கள் : சபா நாவலன்

Saturday 26 July 2008

இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

'1983 - 2008 நெடுங்குருதி’ நிகழ்வின் ஏற்பாட்டாளர் குகன் தெய்வேந்திரன் இன்று (யூலை 26) காலை பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யூலை 23 இரவு அவரது கடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றிய தாஸ் என்பவரே இச்சம்பவத்தில் காயப்பட்டு இருந்தார். இவர் இன்னமும் பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் கடுமையான காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது. இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக கடையின் ‘பெயரளவில் உரிமையானவர்’ பல மணிநேரம் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு இருந்தார். மேலும் காயமடைந்த தாஸ் என்பவரும் மருத்துவமனையில் பொலிசாரால் விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ”ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!” ஏற்பாட்டாளர்கள் : த ஜெயபாலன்

பஸ் டிரைவரின் மகளாக இருந்து ஐநா மனித உரிமை ஆணையாளராக திருமதி நவநீதம் பிள்ளை : த ஜெயபாலன்

திருமதி நவநீதம் பிள்ளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக யூலை 24 அன்று அறிவிக்கப்பட்டு உள்ளார். இவ்வறிவித்தலை ஐநா செயலாளர் நாயகம் பங்கி மூன் யூலை 24ல் வெளியிட்டார். யூலை 28ல் ஐநாவின் பொதுச்சபை கூடி இவரது நியமனத்தை உறுதிப்படுத்தும்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பஸ் டிரைவரின் மகளாக இருந்து ஐநா மனித உரிமை ஆணையாளராக திருமதி நவநீதம் பிள்ளை : த ஜெயபாலன்

”கருணாநிதிக்கு என்ன அருகதை!” விமல்வீரவன்ச

”இலங்கைப் படையினரின் யுத்த நடவடிக்கையை முறியடித்துப் புலிகளையும் அவர்களின் இடங்களையும் பாதுகாக்கும் நோக்கிலும், இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கருணாநிதி செயற்பட்டு வருகிறார்” என்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கருணாநிதிக்கு என்ன அருகதை!” விமல்வீரவன்ச

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும் - மு. கருணாநிதி

”தமிழக மீனவர்கள் கச்சதீவையொட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து சார்க் மாநாட்டுக்கு செல்லும்போது இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டும்” என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் (July 23) டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியபோதே கருணாநிதி இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும் - மு. கருணாநிதி

”அணுசக்தி விவகாரத்தில் இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போன்று நடத்த முயற்சித்தனர்” பிரதமர் மன்மோகன்சிங்

”இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விடயத்தில் தான் அவர்களின் கொத்தடிமை போல செயற்பட வேண்டும்” என்று இடதுசாரிகள் விரும்பினர் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில். ”இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னாட்டு அணுசக்தி முகாமையுடனும், அணு தொழில்நுட்க வணிகக்குழு (என்.எஸ்.ஜி) வுடனும் பேச்சு நடத்துவதற்கு எங்களை அனுமதியுங்கள். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்று இடதுசாரிகளிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். அயலுறவுக்கொள்கை சார்ந்த இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயலும் எந்தவொரு அரசும் விடுப்பது போன்ற இந்த சாதாரணமான வேண்டுகோளுக்கும் இடதுசாரிகள் அனுமதியளிக்கவில்லை....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”அணுசக்தி விவகாரத்தில் இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போன்று நடத்த முயற்சித்தனர்” பிரதமர் மன்மோகன்சிங்

27ஆம் திகதி முதல் விமானத் தாக்குதல், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா? - லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி.

”எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விமானத் தாக்குதல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பாதுகாப்புச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
27ஆம் திகதி முதல் விமானத் தாக்குதல், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா? - லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி.

சார்க்’ பாதுகாப்பில் 12 ஆயிரம் பொலிஸ்

”கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு, அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்போர் முழுமையான கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவர்” என கொழும்பு வடக்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (July 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
சார்க்’ பாதுகாப்பில் 12 ஆயிரம் பொலிஸ்

இந்தியா தனது சர்வாதிகாரத்தை இலங்கையில் நிலைநாட்ட முயல்கிறது - அநுரகுமார திஸாநாயக்க

”இலங்கையின் தேசிய பிரச்சினையை சிக்கல் நிலைக்குள் தள்ளி - இலங்கையை முற்றாக ஆக்கிரமித்து அதனூடாக தனது சர்வாதிகாரத்தை இலங்கையில் நிலைநாட்ட இந்தியா முயற்சிசெய்து வருகிறது” என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநயாக்க நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இந்தியா தனது சர்வாதிகாரத்தை இலங்கையில் நிலைநாட்ட முயல்கிறது - அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை அரசியல் வாதிகளின் இந்திய விஜயம் குறித்து இந்தியா அதிருப்தி

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு முன்னறிவித்தலின்றி விஜயம் மேற்கொள்வது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்தியா எதிர்காலத்தில் இவ்வாறான விஜயங்களின் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சினால் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபுர்வ கடிதத்திலேயே இது குறித்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இலங்கை அமைச்சர்கள் பலர் முன்னறிவித்தலின்றி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரியுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலங்கை அரசியல் வாதிகளின் இந்திய விஜயம் குறித்து இந்தியா அதிருப்தி

”இந்தியப் பிரதமர் வடக்கு, கிழக்கு இணைப்பையே விரும்புகின்றார்.” இரா. சம்பந்தன்

கிழக்கின் பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களை மீள அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு மீளக் குடியமர்த்தப்படாமலுள்ளனர் எனவும் அவர் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இந்தியப் பிரதமர் வடக்கு, கிழக்கு இணைப்பையே விரும்புகின்றார்.” இரா. சம்பந்தன்

இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் - 1983 கறுப்பு யூலை நினைவாக : சேனன்

1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்றுசொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன உறவை கொச்சைப்படுத்துவது பிழை. ஆயிக்கணக்கான மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும் சரி – வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமைகள் தாக்கப்பட்டபோதும் சரி தெற்கில் ஏராளமான சிங்கள மக்கள் தமிழர் பக்கம் நின்றுள்ளார்கள். தமிழ் தலைமகள் தமிழர் உரிமைகளை கைவிட்ட தருனங்களிற்கூட அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். 83 படுகொலை பற்றிய முழு விசாரணை நடத்தப்பட்டு, ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மேலும் பொறுப்பை போட்டு தப்பும் எமது பொல்லாத தலைமைகளின் போக்கிரித்தனத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் - 1983 கறுப்பு யூலை நினைவாக : சேனன்

Friday 25 July 2008

‘1983 - 2008 நெடுங்குருதி’ பாரிஸ் சார்சல் வரை கசிகிறது : த ஜெயபாலன்

பிரான்ஸின் சார்சல்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக பிரான்ஸின் சார்சல்ஸ் பகுதியில் கடை வைத்துள்ள உரிமையாளர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். வியாபார நிலையத்தின் உரிமையாளர் பெயரளவிலேயே உரிமையாளர் என்றும் வியாபார நிலையத்தை குகன் தெய்வேந்திரன் என்பவரே பின்னணியில் நடத்தி வருவதாகவும் அப்பகுதியில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் தாஸ் என அறியப்பட்டு உள்ளார். இவர் சார்சல்லில் உள்ள அக்கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
‘1983 - 2008 நெடுங்குருதி’ பாரிஸ் சார்சல் வரை கசிகிறது : த ஜெயபாலன்

Thursday 24 July 2008

ஈழ ‘தமிழ்’ பேசும் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு –அரசாங்கங்களும் அமைப்புக்களும் மன்னிப்பு கேட்கவேண்டும்.-நாகார்ஜுனன் (பகுதி 4) : சேனன்

ஈழ ‘தமிழ்’ பேசும் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு –அரசாங்கங்களும் அமைப்புக்களும் மன்னிப்பு கேட்கவேண்டும்.-நாகார்ஜுனன் (பகுதி 4) : சேனன்

ஈழத்தமிழர்களின் பிரச்னை, இனப்பிரச்னை குறித்து தமிழ்நாட்டில் இயங்கியவர் என்ற வகையில் உங்கள் கண்ணோட்டம் இன்றைக்கு எப்படி இருக்கிறது?

உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச் சொல்ல முடியும்.

.....

view all in thesamnet.co.uk

Wednesday 23 July 2008

1983 யூலை - ‘நினைவுகள் மரணிக்கும்போது’ : அ. சிவானந்தனுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்

அ சிவானந்தன் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களை குறிப்பாக 1958 1983 இனக்கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கலத்தில் When Memory Dies என்ற நாவலை 1997ல் வெளியிட்டு இருந்தார். கடந்த 40 ஆண்டுகளாக Race and Class என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வருபவர். New Left, Mnthly Review ஆகிய சர்வதேச சஞ்சிகைகளினால் சிறந்த அரசியல் பகுப்பாய்வளராக கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவானந்தனுடனான யமுனா ராஜேந்திரனின் உரையாடல் சில ஆண்டுகளுக்கு முன்ரேயே பதிவு செய்யப்பட்டது. 1958 கலவரத்தின் 50வது வருடமும் 1983 கலவரத்தின் 25வது வருடமும் நினைவுகூரப்படும் நிலையில், இவ்உரையாடல் பொருத்தமானது என்ற வகையில் பதிவாகிறது. இதனைத் தொடர்ந்து இந்நாவல் பற்றிய யமுனா ராஜேந்திரனின் விமர்சனமும் பதிவாகும்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
1983 யூலை - ‘நினைவுகள் மரணிக்கும்போது’ : அ. சிவானந்தனுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்

”மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்க வேண்டிவரும்.” அநுர எம்.பி

மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க வேண்டிய சூழ்நிலை அரசுக்கு உருவாகியுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஜே.வி.பி. மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்க வேண்டிவரும்.” அநுர எம்.பி

மடுமாதா திருச்சொரூபம் மன்னாருக்கு எடுத்துவரப்பட்டது.

மடுமாதா ஆலயத்திலிருந்து பாதுகாப்புக் கருதி எடுத்துச்செல்லப்பட்டு தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதா அன்னையின் திருச்சொரூபம் நேற்று (July 22) புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து மன்னாருக்கு எடுத்து வரப்பட்டு மன்னார் ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
மடுமாதா திருச்சொரூபம் மன்னாருக்கு எடுத்துவரப்பட்டது.

Monday 21 July 2008

”இன்னும் 10 வருடங்களுக்கு அதிகாரத்தைத் தக்கவைக்க திட்டமிடுகிறார் மஹிந்த” அநுர குமாரதிஸாநாயக்க

”தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு ஜனாதிபதி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பாரிய திட்டம் ஒன்றை மஹிந்த ராஜபக்ச வகுத்துள்ளார்” என்றும் - அதன்படி 2010ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலொன்று இடம்பெறலாம் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

”மஹிந்தவின் இத்திட்டத்தின் மூலம் அவரது மகனையும் அரசியலுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றும் ஜே.வி.பி. மேலும் தெரிவித்துள்ளது. ”இருப்பினும் இந்த ஊழல் மோசடிமிக்க அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க இடமளிக்கக்கூடாது” என்று அக்கட்சி கூறுகின்றது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”இன்னும் 10 வருடங்களுக்கு அதிகாரத்தைத் தக்கவைக்க திட்டமிடுகிறார் மஹிந்த” அநுர குமாரதிஸாநாயக்க

”முஸ்லிம்களை அடையாளப்படுத்தாத கிழக்கு கொடி மாற்றப்பட வேண்டும்!” ஹஸன் அலி

”கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றபோதும் மாகாணக் கொடியில் அவர்களுக்கு அடையாளம் இல்லை. ஓர் அங்குலமேனும் பச்சை நிறமில்லை. முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று மு.கா. பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி கிழக்கு மாகாணசபையில் கன்னியுரை நிகழ்த்துகையில் கூறினார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”முஸ்லிம்களை அடையாளப்படுத்தாத கிழக்கு கொடி மாற்றப்பட வேண்டும்!” ஹஸன் அலி

ஜனநாயகத்தை நிலைநாட்ட வருபவர்கள் ஆரம்பிப்தே தேர்தல் வன்முறைகளில்தான் - தயானந்த திஸாநாயக்க

அரசியல் கட்சிகளுக்குள்ளும் அவற்றுக்கு இடையேயும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் இந்தத் தேர்தல் முறையை முற்றாக மாற்றியமைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தத் தேர்தல்களில் கூடுதலான எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அனைவரும் உண்மையான வேட்பாளர்கள் அல்லரெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் பிரதான கட்சிகளின் சார்பில் வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் கூடுதலான பிரதிநிதிகளை நுழைத்துக்கொள்வதற்கே போட்டியிடுகிறார்கள் எனத் தெரிவித்தார்...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஜனநாயகத்தை நிலைநாட்ட வருபவர்கள் ஆரம்பிப்தே தேர்தல் வன்முறைகளில்தான் - தயானந்த திஸாநாயக்க

கல்வியில் உயர்ந்திருந்த எம் சமூகத்தின் நிலைமை தாழ்ந்தது கவலையை தருகின்றது

எந்தவிதமான இன்னல்கள் நேர்ந்தாலும் கல்வியைச் சீரழியவிட்டு விடக்கூடாது. இன்றைய யுத்த நிலையைச் சவாலாகக் கொண்டு கல்வியை மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்வியறிவால் மேம்பட்டு சட்டம் ஒழுங்குகள் மதித்து ஒழுக்க சீலர்களாக வாழவேண்டும். இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் இந்நாட்டை வழிநடாத்தும் தலைவர்களாவர்.

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கல்வியில் உயர்ந்திருந்த எம் சமூகத்தின் நிலைமை தாழ்ந்தது கவலையை தருகின்றது

படுகொலைகள் அவசியமானது என்ற அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும் : வரதகுமார் (TIC)

மனித உரிமைகளுக்காகவும் மனிதத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இந்த முக்கியமான நிகழ்வில் உங்களுடன் கலந்துகொண்டு மகேஸ்வரிக்கு அஞ்சலியை செலுத்துவதில் நிறைவடைகிறேன்.

ஒருவருடைய மதிப்பான செய்கைகளும் சாதனைகளும் மட்டும் அவர் எப்படியானவர், எப்டிப்பட்டவர் என்பதை விளக்க போதுமானதல்ல. மகேஸ்வரி என்னுடன் பணியாற்றியவர். நல்ல நண்பர். அவர் மிக மோசமான முறையில் 13 மேயில் கரவெட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து அவருடைய வயதான தாயோரோடு இருந்தவேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் மகேஸ்வரி செய்த சேவைகளை அறிந்திருக்கவில்லை. அயராது சமூகத்திற்கு உழைத்த மகேஸ்வரியின் இழப்பு ஒரு பாரிய இழப்பு. மகேஸ்வரி முன்னரும் படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர். அவர் தனக்குள்ள ஆபத்தை மிகவும் அறிந்திருந்தவர். ஆனால் இது அவருடைய மக்களுக்கான சேவையைத் தொடர்வதை குறைக்கவில்லை. நீதிக்கான ஆர்வம், அகதிகள் பிரச்சினை, சமூகத்துடனான தொடர்பும் தலைமைத்துவப் பண்பும் இளம் வயதிலிருந்தே அவரில் ஆழமாக வேரூன்றி இருந்தது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
படுகொலைகள் அவசியமானது என்ற அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும் : வரதகுமார் (TIC)

Sunday 20 July 2008

குற்றவாளிகளை அடையாளம் காணவே வீடீயோப் படமெடுக்கப்பட்டது - சட்டமா அதிபர்

தமிழர்கள் அநாவசியமாக கைது செய்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முகத்துவாரம் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்காகவே அங்குள்ளவர்களை வீடீயோ எடுத்ததாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
குற்றவாளிகளை அடையாளம் காணவே வீடீயோப் படமெடுக்கப்பட்டது - சட்டமா அதிபர்

கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் ஈ.பி.டி.பி. அலுவலக வளவுக்குள்

மட்டக்களப்பு செங்கலடிப் பகுதியில் கடந்த மாத நடுப்பகுதியில் வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரது சடலம் வியாழக்கிழமை (July 17) காலை கொம்மாதுறை ஈ.பி.டி.பி. அலுவலக வளவிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் ஈ.பி.டி.பி. அலுவலக வளவுக்குள்

”கிழக்குக்கு பொலிஸ் அதிகாரம்!” ஹிஸ்புல்லாஹ் - பிரிட்டிஸ் அமைச்சர் கிழக்கு முதல்வர் சந்திப்பு : வி அருட்சல்வன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஸ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் மலோச் பிறவுண் பிரபு தலைமையிலான உயர்மட்டக் குழு அண்மையில் (யூலை 16) திருகோணமலைக்கு விஜயம் செய்தது. கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்த இந்தக்குழு, முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினர். முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரியவருகிறது...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
”கிழக்குக்கு பொலிஸ் அதிகாரம்!” ஹிஸ்புல்லாஹ் - பிரிட்டிஸ் அமைச்சர் கிழக்கு முதல்வர் சந்திப்பு : வி அருட்சல்வன்

லண்டன் தெருக்களில் மற்றவர் தலையை துண்டிக்க முயற்சித்து, தம் இளமையைத் தொலைத்தனர். - 63 ஆண்டுகள் சிறைத் தண்டனை! : த ஜெயபாலன்

கொலை முயற்சி மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட 7 தமிழ் இளைஞர்களுக்கு ஓல்ட் பெயிலி; (Old Bailey) 63 ஆண்டுகள் நீண்ட சிறைத்தண்டனையை நேற்று (யூலை 18)ல் வழங்கி உள்ளது. ”மோசமான காயங்களை ஏற்படுத்துவதற்காக அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் இது. லண்டன் தெருக்களில் கோஸ்டி மோதல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது” என்று குற்றவாளிகளுக்கான தண்டனையை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி ரிச்சட் ஹக்கின் கியூசி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார். யூன் 19ம் திகதி குற்றவாளிகளாக காணப்பட்ட இவர்களுக்கு நேற்று தண்டனைக் காலம் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்ப்பினை நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் வரவேற்பதாகத் தேசம்நெற் இணையத்திற்குத் தெரிவித்தார்....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
லண்டன் தெருக்களில் மற்றவர் தலையை துண்டிக்க முயற்சித்து, தம் இளமையைத் தொலைத்தனர். - 63 ஆண்டுகள் சிறைத் தண்டனை! : த ஜெயபாலன்

பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசியல் தஞ்ச வழக்கில் தமிழருக்கு சாதகமான தீர்ப்பு!!! : த ஜெயபாலன்

ஐரோப்பிய நீதிமன்றத்தில் நேற்று (யூலை 17) பிரித்தானிய அரசுக்கு எதிராக என்ஏ (NA) என்று அறியப்பட்ட இலங்கைத் தமிழர் தொடுத்த வழக்கில், என்ஏ க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்புவது ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் 3வது சரத்தை அல்லது 2வது சரத்தை (அல்லது 2வது சரத்தையும் 3வது சரத்தையும்) மீறுகிறது என்றும் அது அநீதியானது என்றும் என்ஏ பிரித்தானிய அரசின் முடிவுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார். (Article 2: Everyone’s right to life shall be protected by law. No one shall be deprived of his life intentionally save in the execution of a sentence of a court following his conviction of a crime for which this penalty is provided by law. Article 3: No one shall be subjected to torture or to inhuman or degrading treatment or punishment.)....

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசியல் தஞ்ச வழக்கில் தமிழருக்கு சாதகமான தீர்ப்பு!!! : த ஜெயபாலன்
Newer Posts Older Posts Home